Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர்

Go down

200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர் Empty 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர்

Post by oviya Fri May 15, 2015 3:08 pm

தனியார் நிறுவனம் ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் யாதவ் என்பவர், தன்னுடைய அனைத்து பங்குகளையும் நிறுவன ஊழியர்களுக்கு அளித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் இணைய தளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறி வரும் ஆன்லைன் நிறுவனங்களில் ஹவுசிங்.காம் நிறுவனம் முக்கியமானதாகும்.

ஹவுசிங்.காம் நிறுவனம் 2012-ம் ஆண்டு மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த 12 நண்பர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.

வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு வசதியாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

ராகுல் யாதவ் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனத்தில் இவருக்கு 4.5 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடியாகும்.

இந்நிலையில் இவர் தற்போது அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். அதாவது, அவர் தன் பங்குகளை நிறுவனத்தில் பணியாற்றும் 2,251 ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் யாதவ் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளார்.

இந்த அதிரடி முடிவால் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் நிறுவன பங்குதாரர்கள் ஆகியுள்ளதால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது ராகுல் கூறுகையில், தற்போது தனக்கு 26 வயதே ஆகும் நிலையில் இவ்வளவு சிறிய வயதில் இத்தகைய தொகை தனக்கு தேவைப்படாது என்பதால் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum