Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19வது திருத்தச் சட்டம்: மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட பாரிய அரசியல் அடி

Go down

19வது திருத்தச் சட்டம்: மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட பாரிய அரசியல் அடி Empty 19வது திருத்தச் சட்டம்: மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட பாரிய அரசியல் அடி

Post by oviya Wed Apr 29, 2015 12:35 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்ட போதிலும் அவை தோற்கடிக்கப்பட்டு, திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த கடந்த 21 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் அதனை குழப்பியதுடன் நாடாளுமன்ற அவையை தமது நித்திரை செய்யும் அறையாக மாற்றியதுடன் பாரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் மகிந்த ராஜபக்சவின் சகல சதித்திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டு, நேற்று நாடாளுமன்றத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மகிந்தவையும் கோத்தபாயவையும் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்தமையை காரணமாக கொண்டு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்த மகிந்த தரப்பு மேற்கொண்ட திட்டம், மக்கள் சக்திக்கு முன்னால் தவிடுபொடியாகி போயுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச மீண்டும் அந்த பதவிக்காக போட்டியிட முடியாது.

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க கூடிய வகையில் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றிய 18ஆவது திருத்தச் சட்டம் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இரத்துச் செய்யப்பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியான பாரிய அடி எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum