Top posting users this month
No user |
Similar topics
3500 இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கிய இந்தியா
Page 1 of 1
3500 இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கிய இந்தியா
ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு கப்பல்களை அனுப்ப உள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8 நாடுகள் ஒன்று சேர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதும், அங்குள்ள இந்தியர்களை வெளியேறும் படி அறிவுறுத்தியது இந்தியா. இந்நிலையில், அங்கு போர் தீவிரமடைந்து வருவதால் கப்பல்கள் மூலம் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏமனில் 3500க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். தலைநகர் சனாவில் மட்டும் 2500க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் ஆவர். எனவே, ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரும், அந்நாட்டை விட்டுப் புறப்படத் தேவையான அனைத்து உதவிகளையும் சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.
ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8 நாடுகள் ஒன்று சேர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதும், அங்குள்ள இந்தியர்களை வெளியேறும் படி அறிவுறுத்தியது இந்தியா. இந்நிலையில், அங்கு போர் தீவிரமடைந்து வருவதால் கப்பல்கள் மூலம் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏமனில் 3500க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். தலைநகர் சனாவில் மட்டும் 2500க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் ஆவர். எனவே, ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரும், அந்நாட்டை விட்டுப் புறப்படத் தேவையான அனைத்து உதவிகளையும் சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
» கடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்துக் குவிப்பு வழக்கு
» அவுஸ்திரேலிய நாளிதழில் இந்தியர்களை கேலி செய்து கார்ட்டூன்: உலகளவில் வலுக்கும் கண்டனம்
» கடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்துக் குவிப்பு வழக்கு
» அவுஸ்திரேலிய நாளிதழில் இந்தியர்களை கேலி செய்து கார்ட்டூன்: உலகளவில் வலுக்கும் கண்டனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum