Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் கைதிகள் என்ற சொற்பிரயோகமே இருக்கக் கூடாது: வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Go down

அரசியல் கைதிகள் என்ற சொற்பிரயோகமே இருக்கக் கூடாது: வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் Empty அரசியல் கைதிகள் என்ற சொற்பிரயோகமே இருக்கக் கூடாது: வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Post by oviya Tue Feb 03, 2015 12:47 pm

காணாமல் போனோரின் உறவுகள் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். தேவராஜா தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி. பாஸ்கரா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உப தவிசாளர் ரவி, உறுப்பினர் க. பரமேஸ்வரன், தர்மலிங்கம், வெங்கலசெட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன்(சிவம்) மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும். ‘அரசியல் கைதிகள்’ எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum