Top posting users this month
No user |
Similar topics
வெள்ள நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்க உயர்நீதிமன்றம் யோசனை: காரணம் என்ன?
Page 1 of 1
வெள்ள நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்க உயர்நீதிமன்றம் யோசனை: காரணம் என்ன?
வெள்ள நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடவேண்டும்.
அரசு வழங்கும் நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்று ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் நாங்கள் உத்தரவிட்டிருந்தோம்.
எனவே, அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது. அதேவேளையில் அரசு வழங்கும் நிவாரண நிதியை குடும்பத் தலைவியிடம்தான் கொடுக்கவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் சுனாமியின்போது வழங்கப்பட்ட நிவாரண நிதியை ஆண்கள் பலர் குடித்து காலி செய்தது தொடர்பான ஒரு ஆய்வு அறிக்கையையும் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆய்வு அறிக்கையை கடந்த 8-ம் திகதி தமிழக அரசுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை, அவர் தந்துள்ள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவினை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடவேண்டும்.
அரசு வழங்கும் நிவாரண நிதியை குடும்ப தலைவியிடம் வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்று ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் நாங்கள் உத்தரவிட்டிருந்தோம்.
எனவே, அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது. அதேவேளையில் அரசு வழங்கும் நிவாரண நிதியை குடும்பத் தலைவியிடம்தான் கொடுக்கவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் சுனாமியின்போது வழங்கப்பட்ட நிவாரண நிதியை ஆண்கள் பலர் குடித்து காலி செய்தது தொடர்பான ஒரு ஆய்வு அறிக்கையையும் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆய்வு அறிக்கையை கடந்த 8-ம் திகதி தமிழக அரசுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை, அவர் தந்துள்ள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவினை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ள நிவாரண நிதி: பாலியல் தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி
» வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி
» விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?
» வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி
» விமான நிலையத்தில் அரை நிர்வாணமாய் ஓட்டமெடுத்த நபர்: காரணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum