Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசீர் சேகுதாவூத் இராஜினாமா கடிதம்! முஸ்லிம் மக்கள் சீற்றம்! - இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Go down

பசீர் சேகுதாவூத் இராஜினாமா கடிதம்! முஸ்லிம் மக்கள் சீற்றம்! - இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச! Empty பசீர் சேகுதாவூத் இராஜினாமா கடிதம்! முஸ்லிம் மக்கள் சீற்றம்! - இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Post by oviya Tue Dec 30, 2014 1:58 pm

பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்திருந்த முஸ்லிம் காங்கிரசின் முடிவு எதிரணிக்கு சாதகமாக அமைந்தது.
கிழக்கில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கின்ற தருணத்தில் மு.கா தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் பதவி விலகல் கடிதம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

ஏதோ தான் வேண்டாவெறுப்பில் கட்சி முடிவுக்கு அடிபணிந்ததாக சொல்லும் இந்த அமைச்சர் முஸ்லிம் மக்களின் நாடித்துடிப்பை அறியாதவராக இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தது வியக்க வைக்கிறது.

எதிரணியில் சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மகிந்தவின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று சொல்வது யாராலும் நியாயப்படுத்த முடியாத கூற்றாகும்.

இதைவிட அவர் அரசாங்கத்துடனே இணைந்து கொண்டிருக்கலாம் என்பதே பலரது கருத்தாகும். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, நாட்டில் ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டிருப்பது முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

சேனைகளை உருவாக்கி இஸ்லாமிய நெஞ்சங்களை புண்படுத்தி, புனித குர்ஆன் வசனங்களை திரிபுபடுத்தி, அல்லாஹ்வுக்கு உருவம் செய்து எம் மார்க்கத்தை களங்கத்திற்கும் எம்மை கலக்கத்திற்கும் உட்படுத்தி வேடிக்கை பார்த்த நாட்டின் தலைவருக்கு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வேன் என்று தனது பதவி விலகல் கடித்ததில் குறிப்பிட்டிருப்பது எம்மை மேலும் சீற்றமடைய வைக்கிறது.

முஸ்லிம் கட்சிகள் தற்போதே தமது முடிவுகளை அறிவித்தாலும் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னரே தீர்மானித்து விட்டார்கள்.

இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் புகழாரம்

நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறினார்.

தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum