Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ப்ளீஸ் என் காதலனுடன் சேர்த்து வைங்க: முதலிரவில் கணவரிடம் கதறி அழுத மனைவி

Go down

ப்ளீஸ் என் காதலனுடன் சேர்த்து வைங்க: முதலிரவில் கணவரிடம் கதறி அழுத மனைவி Empty ப்ளீஸ் என் காதலனுடன் சேர்த்து வைங்க: முதலிரவில் கணவரிடம் கதறி அழுத மனைவி

Post by oviya Fri Oct 16, 2015 2:49 pm

சென்னையை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தனது மனைவியை அவரது காதலருடன் சேர்த்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது ரம்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது ராஜாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியில் இணைந்து படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டில் தெரிந்த போது, அந்த இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் படிப்பையும் அவர்கள் பாதியில் நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போன் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்த விடயமும் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததால், சென்னையில் பொறியாளராக வேலை பார்த்து வரும் தங்கள் உறவினரில் ஒருவருடன் கடந்த யூன் 11ம் திகதி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

முதல் இரவின் போது, தனது கணவரிடம் அந்த இளம்பெண் தனது காதல் கதையை கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால் கணவன் அதிர்ச்சியடைந்த போதிலும், உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று மனைவிக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் ராஜா மற்றும் அவரது பெற்றோரை சந்தித்து நடந்ததை விளக்கி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் பெற்றுள்ளார்.

இதையடுத்து தனது பெற்றோரிடமும், ரம்யா பெற்றோரிடமும் இதனை தெரிவித்த போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் சென்னையில் வாடகை வீடு எடுத்து கொடுத்து கணவன், மனைவி இருவருக்கும் சமாதானம் செய்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் பெற்றோர் முன் இருவரும் சகஜமான தம்பதி போல நடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆடி மாதம் வந்தபோது ரம்யாவை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றபோது, அவர் தனது காதலன் ராஜாவுடன் காவல் நிலையம் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் பேச்சுவார்த்தை நடத்திய போது ரம்யாவின் கணவர் தனது மனைவி ரம்யாவை அவரது காதலருடன் சேர்த்துவைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனவே, இருவருக்கும் முறையாக விவகாரத்து பெற்று, ராஜாவுக்கும் ரம்யாவுக்கும் திருமணம் செய்துவைக்குமாறு பொலிசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தற்போது ரம்யாவும் அவரது கணவனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், விவாகரத்து கிடைக்கும் வரை, ரம்யா பெண்கள் நல காப்பகத்தில் தங்க பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum