Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!

Go down

தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்! Empty தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!

Post by oviya Thu Jun 11, 2015 3:16 pm

திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வில் தோல்வியடைந்ததால் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சங்கர்பாண்டி (15), ஏ.தொட்டிய பட்டியைச் சேர்ந்த இருளாண்டி மகன் சஞ்சய்கண்ணன் (15). இருவரும் ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.

கடந்தாண்டு நடைபெற்ற 9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டனர்.

இதனையடுத்து சிறப்பு துணைத்தேர்வில், தோல்வியடைந்த 2 பாடங்களை மீண்டும் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டியூசனுக்கு சென்ற சங்கர்பாண்டி, சஞ்சய்கண்ணன் ஆகிய இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

நேற்று அதிகாலை திருமங்கலம்- விருதுநகர் ரயில் வழித்தடத்தில் கரிசல்பட்டி அருகே தண்டவாளத்தில் 2 சிறுவர்களின் உடல்கள் தலையின்றி கிடப்பதாக திருமங்கலம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அணிந்திருந்த உடைகளை வைத்து உடலை உறவினர்களும் அடையாளம் கண்டனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான பொலிசாரின் விசாரணையில், 9ம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்ததால் இருவருமே அதுபற்றி பேசி வருந்தியுள்ளனர்.

இச்சூழலில் சஞ்சய்கண்ணன், சங்கர்பாண்டி ஆகிய இருவரும் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேதப்பரிசோதனை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum