Top posting users this month
No user |
Similar topics
தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!
Page 1 of 1
தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!
திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வில் தோல்வியடைந்ததால் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சங்கர்பாண்டி (15), ஏ.தொட்டிய பட்டியைச் சேர்ந்த இருளாண்டி மகன் சஞ்சய்கண்ணன் (15). இருவரும் ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற 9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டனர்.
இதனையடுத்து சிறப்பு துணைத்தேர்வில், தோல்வியடைந்த 2 பாடங்களை மீண்டும் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டியூசனுக்கு சென்ற சங்கர்பாண்டி, சஞ்சய்கண்ணன் ஆகிய இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
நேற்று அதிகாலை திருமங்கலம்- விருதுநகர் ரயில் வழித்தடத்தில் கரிசல்பட்டி அருகே தண்டவாளத்தில் 2 சிறுவர்களின் உடல்கள் தலையின்றி கிடப்பதாக திருமங்கலம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பொலிசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அணிந்திருந்த உடைகளை வைத்து உடலை உறவினர்களும் அடையாளம் கண்டனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான பொலிசாரின் விசாரணையில், 9ம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்ததால் இருவருமே அதுபற்றி பேசி வருந்தியுள்ளனர்.
இச்சூழலில் சஞ்சய்கண்ணன், சங்கர்பாண்டி ஆகிய இருவரும் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரேதப்பரிசோதனை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்த முனியப்பன் மகன் சங்கர்பாண்டி (15), ஏ.தொட்டிய பட்டியைச் சேர்ந்த இருளாண்டி மகன் சஞ்சய்கண்ணன் (15). இருவரும் ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற 9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டனர்.
இதனையடுத்து சிறப்பு துணைத்தேர்வில், தோல்வியடைந்த 2 பாடங்களை மீண்டும் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டியூசனுக்கு சென்ற சங்கர்பாண்டி, சஞ்சய்கண்ணன் ஆகிய இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
நேற்று அதிகாலை திருமங்கலம்- விருதுநகர் ரயில் வழித்தடத்தில் கரிசல்பட்டி அருகே தண்டவாளத்தில் 2 சிறுவர்களின் உடல்கள் தலையின்றி கிடப்பதாக திருமங்கலம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பொலிசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அணிந்திருந்த உடைகளை வைத்து உடலை உறவினர்களும் அடையாளம் கண்டனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான பொலிசாரின் விசாரணையில், 9ம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்ததால் இருவருமே அதுபற்றி பேசி வருந்தியுள்ளனர்.
இச்சூழலில் சஞ்சய்கண்ணன், சங்கர்பாண்டி ஆகிய இருவரும் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரேதப்பரிசோதனை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கழிவறைக்குள் பிறந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை: உயிர் பிழைத்த அதிசயம்
» கர்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய கணவன்: தண்டவாளத்தில் குழந்தை பிரசவம்
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
» கர்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய கணவன்: தண்டவாளத்தில் குழந்தை பிரசவம்
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum