Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தனியாக பயணித்த இளம்பெண்..சுற்றிவளைத்த வாலிபர்கள்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ்.

Go down

தனியாக பயணித்த இளம்பெண்..சுற்றிவளைத்த வாலிபர்கள்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ். Empty தனியாக பயணித்த இளம்பெண்..சுற்றிவளைத்த வாலிபர்கள்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ்.

Post by oviya Sun May 31, 2015 3:25 pm

ரயிலில் தனியாக பயணம் செய்த இளம்பெண் ஒருவர் தன்னை சுற்றி வளைத்த வாலிபர்களிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் தப்பியுள்ளார்.
டேராடூனின் விகாஸ்நகரை சேர்ந்த ஹெரால்டு என்பவரது மகள் அஞ்சலி இலியாஸ் (19) ஐதராபாத்தில் செவிலியர் பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த 27ம் திகதி, ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு தனியாக புறப்பட்ட அவரது பெட்டியில், 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பம் பயணித்துள்ளது.

அவர்கள் ரயில் புறப்பட்டதில் இருந்து, சில மணி நேரத்திலேயே அஞ்சலியுடன் நெருக்கமாகிவிட்டனர்.

அடுத்த நாள் காலை, அந்த குடும்பத்தை சேர்ந்த சில இளைஞர்கள், அஞ்சலியை சுற்றி வளைத்து, அவர்களில் ஒருவனை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி சிறை வைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தன்னுடைய செல்போன் மூலம் டேராடூனில் உள்ள தனது தாயாருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மகளின் குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார், ஜி.பி.ஆர்.எஸ்., மூலம், டெல்லி மற்றும் நாக்பூருக்கு இடையில் ரயில் சென்று கொண்டிருப்பதை அறிந்துள்ளனர்.

உடனே, நாக்பூரின் சிவில் மற்றும் ரயில்வே பொலிசாருக்கு, சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிற்பகல் 1:30 மணியளவில், நாக்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்த போது, தயாராக இருந்த பொலிசார், சிறை வைக்கப்பட்ட அஞ்சலியை மீட்டு பெற்றோருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum