Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுசீந்திரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

Go down

சுசீந்திரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது    Empty சுசீந்திரம் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது

Post by oviya Mon Dec 22, 2014 2:16 pm

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர்ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.

இன்று (20–ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகமும், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்சகால தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட விநாயக ருக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு காலபைரவருக்கு தீபாராதனையும் நடக்கிறது.

நாளை (21–ந்தேதி) ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு ராமபி ரானுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால், தயிர், இளநீர், பன்னீர், எலுமிச்சை சாறு, மாதுளை சாறு, தேன், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், களபம் உள்பட 16 வகை பொருட்கள் அடங்கிய ஷோடச அபிஷேகம் நடக்கிறது.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக 6 டன் அரிசியில் உணவு தயாரிக்கப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் அமர்ந்து அன்னதானம் உண்ணும் வகையில் கோவில் கலை யரங்கம், எஸ்.எம்.எஸ்.எம். பள்ளி வளாகம், துவாரகை கிருஷ்ணன் கோவில் கலையரங்கம் ஆகிய 3 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மதியம் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், திருநீறு, குங்குமம், சந்தனம் ஆகியன வழங்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு ராம ஆஞ்சநேய பக்தர்கள் குழு வினரின் பஜனையும், 6.30 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், 7 மணிக்கு 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு அரளி, பிச்சி, கொழுந்து, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, துளசி, ரோஜா, பச்சை, மரிக்கொழுந்து, செண்பகப்பூ உள்பட அனைத்து விதமான பூக்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum