Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுதாருங்கள்: கதறும் பட்டதாரி பெண்

Go down

கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுதாருங்கள்: கதறும் பட்டதாரி பெண் Empty கவர்ச்சி நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுதாருங்கள்: கதறும் பட்டதாரி பெண்

Post by oviya Thu Apr 23, 2015 1:04 pm

சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர், கவர்ச்சி நடன நடிகை அல்போன்சாவிடம் இருந்து, தனது கணவரை மீட்டுதாருங்கள் என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த 32 வயது எம்.சி.ஏ. பட்டதாரி பெண் ஒருவர் நேற்று சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நான் சென்னையில் எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும்போது, ஜெய்சங்கர் என்பவரை காதலித்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 8 ஆண்டுகளாக எங்கள் காதலை வெளியில் செல்லவில்லை.

பின்னர் எங்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததால், கடந்த 2013-ம் ஆண்டு யூலை மாதம் மருதமலை முருகன் கோவிலில் எங்கள் திருமணம் நடந்தது.

எங்கள் திருமணத்தை முறையாக பதிவும் செய்து கொண்டோம்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த எனது கணவருடன் நான் 15 நாட்கள்தான் சேர்ந்து வாழ்ந்தேன்.

அதன் பிறகு வேலை கிடைத்து துபாய் சென்ற அவர் என்னை துபாய்க்கு அழைத்து செல்வதாக சொல்லி சென்றார். கைப்பேசியில் பேசினால் அழைத்து செல்வதாக சொல்வார்.

பின்னர் அவர் என்னுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டதால் சைதாப்பேட்டை பொலிசில் புகார் அளித்தோம்.

இதையடுத்து அவர் சென்னை வந்தபோது பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பொலிசாரிடம், என்னை துபாய் அழைத்து செல்வதாக எழுதி கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அப்போதும் அவர் என்னை துபாய்க்கு அழைத்து செல்லவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது பேஸ்புக்கில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பதுபோல புகைப்படம் போட்டு, அந்த பெண்ணை தனது மனைவி என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் என் கணவருடன் இருக்கும் பெண், பிரபல சினிமா கவர்ச்சி நடன நடிகை அல்போன்சா என்று தெரிய வந்தது.

என்னை தொலைபேசியில் மிரட்டிய அல்போன்சா, எனது கணவரை முதலில் திருமணம் செய்தேன் என்று கூறுகிறார்.

இதனால் நான் எனது கணவரை அவருக்கு விட்டு கொடுத்து விட்டு, ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் என்னை தொலைத்து கட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது உயிரான காதல் கணவரை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன்.

நடிகை அல்போன்சாவிடம் இருந்து எனது கணவரை மீட்டு தருவதோடு, அல்போன்சா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum