Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்

Go down

ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்  Empty ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்

Post by oviya Mon Apr 20, 2015 2:25 pm

டெல்லியில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் ப்ரியா வேதி (31) என்ற பெண் மருத்துவராக இருந்துள்ளார்.

அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் கமல் வேதி என்ற மருத்துவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை பொலிசில் புகார் அளித்ததால் பொலிசார் ப்ரியாவை தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது ஹொட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கதவை திறக்கவில்லை என்று பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அந்த ஹொட்டலுக்கு சென்று கதவை தட்டியபோது யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ப்ரியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

விசாரணையில், ப்ரியாவின் கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதும், அதனால் அவர் ப்ரியாவினை மனதளவில் கொடுமை படுத்தியதும் தெரியவந்துள்ளது.

ப்ரியாவின் உடலை கைப்பற்றிய பொலிசார் கூறுகையில், ப்ரியா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை தெரிவித்துள்ளதாகவும், தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் கணவர் கொடுமைபடுத்தியதை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் கணவருக்கு அனுப்பிய கடைசி செய்தியில், நான் உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் உன்னிடம் உடலுறவை விரும்புவதாக நீயாகவே தவறாக நினைத்து கொண்டாய். ஆனால் அது முற்றிலும் தவறு.

நான் உன்னுடன் இருப்பதை மட்டுமே விரும்பினேன். உன்னுடைய பாலின வேறுபாடை அறிந்தும் உன்னை நான் மிகவும் நேசித்தேன். ஆனால் நீ அதனை புரிந்து கொள்ளவில்லை.

மேலும், நீ என் வாழ்வின் குற்றவாளி என்றும் நீ ஒரு பேய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து கமல் வேதியை கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum