Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கஞ்சாவுடன் ஐவர் கைது- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது!

Go down

கஞ்சாவுடன் ஐவர் கைது- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது! Empty கஞ்சாவுடன் ஐவர் கைது- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது!

Post by oviya Sun Apr 19, 2015 3:23 pm

தங்காலை பிரதேசத்தில் சமீப நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத துப்பாக்கி மற்றும் போதை பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏனைய நால்வரும் கஞ்சா போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது!

மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு கடத்தி செல்லப்பட்ட பல இலட்சம் பெறுமதியான முதிரை மரங்களை அடம்பன் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பள்ளி மடு சந்தியில் பொலிசார் வாகனங்களை சோதனையிட்ட போது இந்த சட்ட விரோத மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.

மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட 43 மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்துடன் இவற்றை ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களையும்,வாகனங்களின் சாரதி உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள்,டிப்பர் வாகனங்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் இன்று மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum