Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!

Go down

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்! Empty திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!

Post by oviya Sat Apr 11, 2015 2:16 pm

* மகிழ்ச்சியைப் புதிதாகத் தேட வேண்டியதில்லை. நம் இயல்பான நிலையே மகிழ்ச்சி தான்.
* நீ செய்ய வேண்டிய ஒரே பணி உன்னிடமுள்ள மகிழ்ச்சியின்மையை நீக்குவது மட்டுமே. பின்னர் மகிழ்ச்சி தானாக வெளிப்படும்.
* இருதயம் ரத்தத்தை சுத்திகரிக்கும் அங்கம் மட்டுமல்ல. அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அதுவே. "இருதயம்' என்றால் "மையம்' என்று பொருள்.
* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடலோ இருதயத்தில் அடங்கி இருக்கிறது. எனவே, பிரபஞ்சமே இருதயத்தில் அடங்கியுள்ளது.
* சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இருதயம் மனதிற்கு ஒளியூட்டுவதாக இருக்கிறது.
* மூளையைக் கொண்டு கவனம் செலுத்தி பணியாற்றுவதால் சூடு, தலைவலி உண்டாகும். அதனால் இருதயத்தில் கவனம் செலுத்தி பணிபுரிவது நல்லது.
* சூழ்நிலை ஒருபோதும் மனிதன் விருப்பம் போல அமைவதில்லை.
* அமைதியுடன் வாழ்வதே இயல்பு. ஆனால் பெரும்பாலும் அமைதியின்மையைப் பற்றி மட்டுமே பேச நேரிடுகிறது.
* நல்லவர்களோடு பழக வேண்டும். இதனால், மனம் மகிழ்ச்சியில் மூழ்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் வாழ முடியும்.
* எண்ணங்களின் தொகுப்பே மனம். தேடிக் கண்டுபிடித்தால் மனம் என்ற ஒரு பொருள் தனியாக இல்லை என்பது தெரிய வரும்.
* எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கவே செய்யும்.
* எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்ற மனமே வலிமையானது. ஞானவழியில் மனம் செல்லுமானால் உலகமே கடவுள் மயமாகத் தெரியும்.
* அலை பாயும் மனம் எண்ணத்தால் சிதறிப் போய் பலவீனம் பெறுகிறது. மனம் ஒரே எண்ணத்தில் குவியுமானால் அதன் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
* மனிதன் தன்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை. உலக விஷயத்தைப் பற்றி அறிவதிலேயே நாட்டம் கொள்கிறான்.
* நீ நீயாகவே எப்போதும் இரு. இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும்.
* அகந்தையின் வலையில் விழுந்து விடாதே. அதனால் ஆரவாரம் மிக்க வெற்றுப் பேச்சை விட்டு விடு.
* மூச்சைக் கட்டுப்படுத்தினால் மனம் அடங்கும். அடங்கிய மனம் கட்டப்பட்ட மிருகம் போல எங்கும் அலையாமல் நிற்கும்.
* அருளின் உச்சவடிவம் மவுனம் தான். அதுதான் உயர்ந்தபட்ச உபதேசமாகவும் இருக்கிறது.
* நான் யார் என்ற கேள்வியை இடைவிடாது கேட்டுக் கொண்டிரு. பதிலைத் தேடிச் செல். வழி கிடைத்து விடும்.
* தனிமனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாயமே திருந்தி விடும். அதனால் மனிதன் சுயமாக தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* பலம் அற்றவன், தீயவன் என்று ஒருபோதும் உன்னை நினைக்காதே. உலகிலுள்ள ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்களே.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum