Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பர மோதல்! அதிர்ச்சியில் மைத்திரி

Go down

இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பர மோதல்! அதிர்ச்சியில் மைத்திரி Empty இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பர மோதல்! அதிர்ச்சியில் மைத்திரி

Post by oviya Sun Apr 05, 2015 12:37 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, ஐக்கிய தேசியக் கட்சியினர் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் மஹிந்தவை பாதுகாப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியினர் உறுதியளித்துள்ளதாக அமரவீர குழுவினர், சந்திரிக்காவிடம் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் அந்தக்கட்சியின் பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்குவதாகும் என்று அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக்கட்சி அவ்வாறு நடந்துக்கொள்ளாது என்று குறிப்பிட்ட சந்திரிக்கா எனினும் இதனை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பதாக உறுதியளித்தார்.

இதற்கிடையில் எதிர்வரும் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினர் பாரிய நிதிச்செலவுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் மஹிந்த அமரவீர குழுவினர், சந்திரிக்காவிடம் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் சுமார் 5000 பௌத்த பிக்குகளை ஒன்று திரட்டி குருணாகலில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டத்தை நடத்த திட்டமிடப்படுவதாகவும் அவர்கள் சந்திரிக்காவிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது அறிவுரை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால இரண்டு தரப்பினரும் பரஸ்பர குற்றம் சுமத்தலை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது மக்கள் மத்தியில் அரசாங்கத்தை பற்றிய கிலேசத்தை கொண்டு வரும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தை ஏப்ரல் இறுதியில் கலைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவின் மீது குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று யோசனையை முன்வைத்தது. எனினும் பின்னர் அதுபற்றி பேசப்படவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum