Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம்

Go down

மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம் Empty மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம்

Post by oviya Mon Mar 09, 2015 12:59 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் 13ம் திகதி இலங்கையை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் அநுராதபுரத்திலுள்ள மஹா போதி புனிதஸ்தலத்துக்கு செல்லவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள யாழ்.கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன், இந்திய உதவியில் கட்டப்படவுள்ள வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை குறிப்புணர்த்தும் வகையில் அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளும் முதல் புகையிரதத்திற்கு கொடியசைத்து இந்திய பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்விலும் பங்கேற்று உரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் கடந்த 1988ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு, கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துவார்.

இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 15ம் திகதி இந்திய பிரதமர் மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பி செல்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum