Top posting users this month
No user |
Similar topics
சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கலாம்: ஆனந்தசங்கரி
Page 1 of 1
சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கலாம்: ஆனந்தசங்கரி
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கலாம் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லாட்சியை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் 100 வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்கு 50 நாட்களாவது நாம் அணைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நல்லாட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தமது தனிப்பட்ட கொள்கைகளை கைவிட்டு ஓரணைியில் இணைந்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் நல்லாட்சியை சீர்குலைப்பதற்கும், பிரச்சினையை உருவாக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
மேலும் நடைபெற்ற 67வது சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் கட்சிகளின் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சில விடயங்களை தந்திரமாக கையாள வேண்டும், எனினும் கூட்டமைப்பிலுள்ள சிலர் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள், இந்நிலையில் இவர்கள் அமைதியாக இருப்பது நன்மை பயக்கும் எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பு! விமர்சனம் வேண்டாம்: நடேசபிள்ளை கோரல்
» நீங்கள் சர்வாதிகாரி இல்லை! சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்
» கனடா குடியுரிமைச் சட்டம் தமிழர்களைப் பாதிக்குமா?: விளக்குகிறார் ஹரி ஆனந்தசங்கரி
» நீங்கள் சர்வாதிகாரி இல்லை! சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்
» கனடா குடியுரிமைச் சட்டம் தமிழர்களைப் பாதிக்குமா?: விளக்குகிறார் ஹரி ஆனந்தசங்கரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum