Top posting users this month
No user |
அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கை வருகை: ஜனநாயகத்தை நிலை நாட்ட நடவடிக்கை
Page 1 of 1
அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கை வருகை: ஜனநாயகத்தை நிலை நாட்ட நடவடிக்கை
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.
இலங்கை வரும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் தற்போது அரசில் உள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான கோரிக்கையை இவ் விஜயத்தின் போது முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இராஜாங்க செயலாளர் உட்பட திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிஷா பிஸ்வால் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான விசாரணையில் போதிய முன்னேற்றம் காணப்படாமை தொடர்பில் சர்வதேசத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இதன்காரணமாக சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூசகமாக வெளியிட்டிருந்தார்.
இதேபோன்று நாட்டில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமை சிறுபான்மையினர் மீதான மதத் தாக்குதல்கள் குறித்தும் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய விஜயத்தின் போது இலங்கையில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்கு புதிய நம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டர்.
இலங்கை வரும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் தற்போது அரசில் உள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான கோரிக்கையை இவ் விஜயத்தின் போது முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இராஜாங்க செயலாளர் உட்பட திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிஷா பிஸ்வால் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான விசாரணையில் போதிய முன்னேற்றம் காணப்படாமை தொடர்பில் சர்வதேசத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இதன்காரணமாக சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூசகமாக வெளியிட்டிருந்தார்.
இதேபோன்று நாட்டில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமை சிறுபான்மையினர் மீதான மதத் தாக்குதல்கள் குறித்தும் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய விஜயத்தின் போது இலங்கையில் ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்கு புதிய நம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum