Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு

Go down

27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு Empty 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு

Post by oviya Mon Jan 26, 2015 11:48 am

கரூர் மாவட்டத்தில் 27 வயது விதவை ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒரு குழந்தையை கொடுத்த 20 வயது மாணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேசன்வீதியைச் சேர்ந்த வீரமலை மகள் கற்பகஜோதி (27). இவருக்கும் குணசேகரன் என்பவருக்கும் கடந்த 2010 ல் காதல் திருமனம் நடந்துள்ளது. 2012 ல் குணசேகரன் இறந்து விட்டார்.

இந்தத் தம்பதிக்கு சுசிப்பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது.

குளித்தலை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் கற்பகஜோதி.

அதே கல்லூரியில் முன்றாம் ஆண்டு இ.சி.இ டிப்ளமோ படித்து வருபவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியைச் சேர்ந்த மனோகரன் மகன் பார்த்தீபன் (20).

இவர் தன் படிப்பு தொடர்பான பிராஜெக்ட் செய்தபோது ஆசிரியை கற்பகஜோதியுடன் பழக்கம் ஏற்பட்டு அது நெருக்கமானது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.

மேலும், கற்பகஜோதியை திருமணம் செய்து கொள்வதாக பார்த்திபன் வாக்கு கொடுத்துள்ளார்.

இதை நம்பிய கற்பகஜோதி மாணவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் மாணவரோ மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த 0.06.14 அன்று பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பார்த்திபனை அழைத்து விசாரித்தபோது திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.

இந்த நிலையில் கற்பக ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகும் திருமணம் செய்ய மறுத்து விட்டார் பார்த்திபன். இதையடுத்து கற்பகஜோதி, பார்த்திபனைத் போய்க் கேட்டபோது, பார்த்திபனின் தந்தை, தாயார் சாந்தி, அண்ணன் சுதாகர், தம்பி சுபாஷ் ஆகியோர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து புதிதாக பிறந்த கைக்குழந்தையுடன் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கற்பகஜோதி புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் பொலிசார் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாகி விட்ட ஐந்து பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum