Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முன்னாள் ஜனாதிபதியின் பொருட்கள் மீட்பு- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Go down

முன்னாள் ஜனாதிபதியின் பொருட்கள் மீட்பு- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி Empty முன்னாள் ஜனாதிபதியின் பொருட்கள் மீட்பு- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

Post by oviya Wed Jan 21, 2015 1:23 pm

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ஒருவரது வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் மற்றும் நீலப் படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் என்பவற்றை செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியிலுள்ள அமைப்பாளர் வீட்டில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த அமைப்பாளரின் வீட்டை சோதனையிட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த அமைப்பாளரின் வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட் 52, நீலப்படையணியின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் 520 என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பொருட்களை புதன்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான ஓமடியாமடு கிராம மக்களுக்கு சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக உணவுப் பொருட்கள் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.

இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இக்கிராமத்தில் வசிக்கும் 151 குடும்பங்களுக்கு வெற்சீட் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் ஓமடியாமடு கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சுவிஸ்லாந்து நவசக்தி விநாயகர் ஆலய நிருவாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum