Top posting users this month
No user |
Similar topics
சாபம் நீங்க வேண்டுமா? கற்பகநாதர் குளத்தில் ஒரு குளியல்
Page 1 of 1
சாபம் நீங்க வேண்டுமா? கற்பகநாதர் குளத்தில் ஒரு குளியல்
சாபம் நீங்க வேண்டுமானால் பொங்கி வரும் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்களில் 109–வது தலமாக விளங்கும் திருக்கடிக் குளம் என்ற திருத்தலத்திற்கு செல்லவேண்டும்.
‘கற்பகநாதர் குளம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் வெளியில் தற்போதும் நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
இந்த கோபுரத்தை தாண்டி, ஆலயத்தினுள் நுழைந்தால், சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் கருணைக் கடலான சிவபெருமானை தரிசனம் செய்யலாம். எட்டுப்பட்டை வடிவில் சிவலிங்கம் காணப்படுகிறது.
இந்த வடிவமானது, அஷ்டலட்சுமியின் அருளை அள்ளித்தரும் வள்ளல் என்றும், எட்டுக் கிளைகளை உடைய தேவர் உலகத்தில் இருக்கும் தேவதருவாகிய கற்பக மரத்தைப் போல கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வடிவத்தின் காரணமாகவே இவ்வாலய சிவபெருமானுக்கு, ‘கற்பகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தல ஈசனை, அஷ்டமி திதியிலும், சனிக்கிழமைகளில் வரும் புத ஓரையிலும் வெண்ணெய் சாத்தி வணங்கினால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
அத்துடன் முன்னோர்களின் சாபம் நீங்கவும் இத்தலத்தில் இறைவனை வேண்டி பிரார்த்திக்கலாம் என்று பக்தர்கள் பலரும் கூறுகிறார்கள்.
‘கற்பகநாதர் குளம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தின் வெளியில் தற்போதும் நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
இந்த கோபுரத்தை தாண்டி, ஆலயத்தினுள் நுழைந்தால், சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் கருணைக் கடலான சிவபெருமானை தரிசனம் செய்யலாம். எட்டுப்பட்டை வடிவில் சிவலிங்கம் காணப்படுகிறது.
இந்த வடிவமானது, அஷ்டலட்சுமியின் அருளை அள்ளித்தரும் வள்ளல் என்றும், எட்டுக் கிளைகளை உடைய தேவர் உலகத்தில் இருக்கும் தேவதருவாகிய கற்பக மரத்தைப் போல கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வடிவத்தின் காரணமாகவே இவ்வாலய சிவபெருமானுக்கு, ‘கற்பகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தல ஈசனை, அஷ்டமி திதியிலும், சனிக்கிழமைகளில் வரும் புத ஓரையிலும் வெண்ணெய் சாத்தி வணங்கினால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
அத்துடன் முன்னோர்களின் சாபம் நீங்கவும் இத்தலத்தில் இறைவனை வேண்டி பிரார்த்திக்கலாம் என்று பக்தர்கள் பலரும் கூறுகிறார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum