Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாய்லாந்து ராமாயணம்

Go down

தாய்லாந்து ராமாயணம் Empty தாய்லாந்து ராமாயணம்

Post by oviya Sat Jan 10, 2015 1:37 pm

விலைரூ.60
ஆசிரியர் : ஸ்ரீவேணுகோபாலன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: 978-81-89936-86-0
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ராமாயணம் கீழை நாடுகள் முழுவதும் அவரவர் குடும்பக் கதைபோல பரவியுள்ளது. இன்று அந்த நாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் சொந்த மண்ணை மிதிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றினால், அந்த உணர்வுக்கு வித்திட்டவை ராமாயணமும் மகாபாரதமுமே ஆகும்.
ஆனால் அந்தந்த நாடுகளின், மக்களின், மண்ணின் தன்மைக்கேற்ப அவை சற்றே இயல்பு மாறி அமைந்திருப்பதை நாம் காணலாம்.
அவற்றில் மிகவும் வித்தியாசமாகவும், மண்ணின் ரசனைக்கேற்ப மாற்றம் பெற்றதாகவும் திகழ்கிறது, தாய்லாந்து நாட்டின் ராமாயணம். அது பல கவிஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகத் தெரியவருகிறது.
அவற்றில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் முதலாம் ராமன் அதிபதி எழுதிய ராமகியான் என்ற இந்த ராமாயணம், தாய்லாந்தில் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த ராமாயணத்தில் தாய்லாந்தின் தன்மைக்கேற்ப அனுமன், பிரம்மசர்ய நிலை களைந்து, திருமணங்கள் செய்து கொண்டவராகக் காட்டப்படுகிறார்.
வாலி, சுக்ரீவன் கதையும், அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும்கூட நமக்கு பழக்கப்பட்ட, ஆனால் சற்றே வித்தியாசமான பெயர்களுடன் உலாவருகின்றன. இருப்பினும் அடிப்படைக் கதையமைப்பு, நம் நாட்டின் வால்மீகி ராமாயணத்தின்படியே இருக்கிறது.

இந்த ராமாயணக் கதை நூல், மிகவும் சுவாரஸ்யமாக, படிப்போர் உள்ளத்துக்கு குதூகலம் தரும் வகையிலான கதையமைப்போடு திகழ்கிறது. இதை தன் எளிய தமிழ் நடையில் சுருக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன்.
நமக்கு ஏற்கெனவே பழகிய ஒன்றாக வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் திகழ்வதால், இந்தத் தாய்லாந்து ராமாயணத்தை நாம் படிக்கும்போது ஏற்படும் கதை வேறுபாட்டை அங்கங்கே கொடுத்து, அதன் மாறுபாட்டையும் விளக்கியுள்ள பாங்கு நமக்கு தெளிவைக் கொடுக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum