Top posting users this month
No user |
Similar topics
புகார் சொன்னால் ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள்..பயந்து கொண்டு வீட்டுக்குள் அடங்கும் பெண்கள்!
Page 1 of 1
புகார் சொன்னால் ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள்..பயந்து கொண்டு வீட்டுக்குள் அடங்கும் பெண்கள்!
மதுரையில் நடக்கும் கிரானைட் முறைகேடுகள் பற்றி சகாயத்திடம் மக்கள் புகார் கூறியுள்ளனர்.
தினசரி காலை எட்டு மணிக்கே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் சகாயம் மதிய உணவு இடைவெளியில்கூட ஓய்வு எடுப்பதில்லை.
கீழவளவு பகுதியில் இருந்த பொக்கிஷ மலை என்கிற சக்கரை பீர் மலை, இந்த மலையை முதலில் அறுக்கும்போதே நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டோம். ஆனால் மலையை காப்பாற்ற முடியவில்லை என்று மக்கள் புகார் கூறியுள்ளனர்.
பொக்கிஷ மலையைச் சுற்றி இருந்த கூத்தன் செட்டி புதுக்குளம், வேப்பம்குடி கண்மாய், குதிரை சாம்பான் கண்மாய் என்று அங்கிருந்த கண்மாய் பகுதிகளுக்குள் கிரானைட் கழிவுகளை மலைபோல் கொட்டி வைத்திருந்தனர்.
மேலும் அந்தப் பகுதி விவசாயிகளிடம் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி நிலங்களை சொற்ப தொகைக்கு மிரட்டி வாங்கி, அவர்களை அந்த இடத்தைவிட்டே விரட்டிவிட்டனர் என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் மக்கள் சோகத்துடன் சொல்ல, அதையும் வாய்ஸ் ரெக்கார்டரில் சகாயம் பதிவு செய்துகொண்டார்.
புது தாமரைபட்டி கிராமத்தில் ஆய்வு செய்துகொண்டு இருந்த சகாயத்திடம், ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்கிறோம். கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்ட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் வைக்கும் வெடிகளில் வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன.
புகார் சொன்னதால் அங்கு வேலை பார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடி பம்பில் வந்து ஜட்டியுடன் குளிப்பார்கள். சில சமயம் அதுவும்கூட இருக்காது.
பொம்பளைங்க பயந்துக்கிட்டு தண்ணீர் எடுக்க போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணை பாலியல் தொல்லை தந்தாங்க. அவனைப் பிடித்து ஆலமரத்தில் கட்டி வைத்திருந்தோம். பி.ஆர்.பி மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தர ஆரம்பித்தனர்.
மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போய்விட்டோம் என்று பூட்டிய மற்றும் இடிந்த வீடுகளைக் காட்டி கதறி அழுதபடியே முருகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தினசரி காலை எட்டு மணிக்கே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் சகாயம் மதிய உணவு இடைவெளியில்கூட ஓய்வு எடுப்பதில்லை.
கீழவளவு பகுதியில் இருந்த பொக்கிஷ மலை என்கிற சக்கரை பீர் மலை, இந்த மலையை முதலில் அறுக்கும்போதே நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டோம். ஆனால் மலையை காப்பாற்ற முடியவில்லை என்று மக்கள் புகார் கூறியுள்ளனர்.
பொக்கிஷ மலையைச் சுற்றி இருந்த கூத்தன் செட்டி புதுக்குளம், வேப்பம்குடி கண்மாய், குதிரை சாம்பான் கண்மாய் என்று அங்கிருந்த கண்மாய் பகுதிகளுக்குள் கிரானைட் கழிவுகளை மலைபோல் கொட்டி வைத்திருந்தனர்.
மேலும் அந்தப் பகுதி விவசாயிகளிடம் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி நிலங்களை சொற்ப தொகைக்கு மிரட்டி வாங்கி, அவர்களை அந்த இடத்தைவிட்டே விரட்டிவிட்டனர் என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் மக்கள் சோகத்துடன் சொல்ல, அதையும் வாய்ஸ் ரெக்கார்டரில் சகாயம் பதிவு செய்துகொண்டார்.
புது தாமரைபட்டி கிராமத்தில் ஆய்வு செய்துகொண்டு இருந்த சகாயத்திடம், ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்கிறோம். கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்ட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் வைக்கும் வெடிகளில் வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன.
புகார் சொன்னதால் அங்கு வேலை பார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடி பம்பில் வந்து ஜட்டியுடன் குளிப்பார்கள். சில சமயம் அதுவும்கூட இருக்காது.
பொம்பளைங்க பயந்துக்கிட்டு தண்ணீர் எடுக்க போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணை பாலியல் தொல்லை தந்தாங்க. அவனைப் பிடித்து ஆலமரத்தில் கட்டி வைத்திருந்தோம். பி.ஆர்.பி மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தர ஆரம்பித்தனர்.
மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போய்விட்டோம் என்று பூட்டிய மற்றும் இடிந்த வீடுகளைக் காட்டி கதறி அழுதபடியே முருகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ரோஹித்த விவாதத்திற்கு வருவார் என பயந்து ரஞ்சன் தனது தங்க ஆபரணங்களை ஒழித்துக்கொண்ட விதம்
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ரோஹித்த விவாதத்திற்கு வருவார் என பயந்து ரஞ்சன் தனது தங்க ஆபரணங்களை ஒழித்துக்கொண்ட விதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum