Top posting users this month
நேவியால் பிடிக்கப்பட்ட அண்ணா பெயர் மாற்றப்பட்டு மண்டைதீவில் சகோதரி சாட்சியம்
Page 1 of 1
நேவியால் பிடிக்கப்பட்ட அண்ணா பெயர் மாற்றப்பட்டு மண்டைதீவில் சகோதரி சாட்சியம்
தொழிலுக்கு சென்ற எனது அண்ணா மண்டைதீவுக் கடலில் வைத்து, நேவியால் (கடற்படை) பிடிக்கப்பட்டு காணாமல்போனார். அவர் இப்போது அப்புக்குட்டி என்ற பெயரில் மண்டைதீவில் நேவிக்கு உணவு சமைத்துக் கொடுத்து வருகின்றார் என்று அவரைக் கண்டவர்கள் மூலம் எமக்குத் தகவல் கிடைத்தது.
அவரை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் கண்ணீருடன் சாட்சியமளித்தார் சகோதரி ஒருவர்.
யாழ். மாவட்டதில் நடைபெற்றுவரும் காணாமல்போனோர் ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியம் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது:-
"கடல் தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட எனது அண்ணா 5 பெண் சகோதரிகளுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை. கடலுக்குத் தொழிலுக்குப் போன இடத்தில் மண்டைதீவுக் கடலில் வைத்து, நேவியால் பிடிக்கப்பட்டு காணாமல்போனார்.
மண்டைதீவில் அப்புக்குட்டி என்ற பெயரில் யாழ்ப்பாணத்து தமிழ் நேவி இருப்பதாகவும் தன்னைக் குடும்பத்துடன் சந்திக்க விடமாட் டார்கள் என அவர் கூறுவதாக இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடைக்காரர் ஒருவர் மூலமாக எமக்குத் தகவல் கிடைத்தது.
அவரை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் கண்ணீருடன் சாட்சியமளித்தார் சகோதரி ஒருவர்.
யாழ். மாவட்டதில் நடைபெற்றுவரும் காணாமல்போனோர் ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியம் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்ததாவது:-
"கடல் தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட எனது அண்ணா 5 பெண் சகோதரிகளுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை. கடலுக்குத் தொழிலுக்குப் போன இடத்தில் மண்டைதீவுக் கடலில் வைத்து, நேவியால் பிடிக்கப்பட்டு காணாமல்போனார்.
மண்டைதீவில் அப்புக்குட்டி என்ற பெயரில் யாழ்ப்பாணத்து தமிழ் நேவி இருப்பதாகவும் தன்னைக் குடும்பத்துடன் சந்திக்க விடமாட் டார்கள் என அவர் கூறுவதாக இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடைக்காரர் ஒருவர் மூலமாக எமக்குத் தகவல் கிடைத்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum