Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2000 ரூபா, மக்களின் நலனுக்காகவே அதிகாரம்: பிரதமர்

Go down

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2000 ரூபா, மக்களின் நலனுக்காகவே அதிகாரம்: பிரதமர் Empty அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2000 ரூபா, மக்களின் நலனுக்காகவே அதிகாரம்: பிரதமர்

Post by oviya Mon Dec 14, 2015 1:52 pm

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் 2 ஆயிரம் ரூபா அடுத்த வருடம் முதல், அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்த கொடுப்பனவில் இரண்டாயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படாது. நிதி ஒதுக்கத்துடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
2000 ரூபா அடிப்படை வேதனமாக சேர்க்கப்படும்

வாகன வருமான பத்திரம் 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கப்பட உள்ளது.

புகைப் பரிசோதனை சான்றிதழ கட்டணம் 5000 ரூபாவிலிருந்து தற்காலிக அடிப்படையில் ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

வாகன குத்தகை மதிப்பீடு கட்டணம் கார்களுக்கு 5000 ரூபாவும், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்படும்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.

இந்த சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதம் முதல் கட்டாயம் அமுல்படுத்தப்பட உள்ளது என பிரதமர் இன்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனுக்காகவே அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்- பிரதமர்

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமக்குள்ள அதிகாரத்தை நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்துவதாகவும் சுய தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஓய்வூதியம் இல்லாது செய்யப்படுவதாகவும், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பன வெவ்வேறாக பேணப்படும் எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவை ஒன்றும் இடம்பெறமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் நிதியை இதற்குப் பிறகு எவரும் கையாள முடியாத வகையில் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

தன்னால் செய்ய முடியாது என்றால் அதிகாரத்தை கைவிடத் தயார் என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 இல் இணைத்துக்கொள்ளப்படுகின்ற அரச ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத் திட்டம் செயற்படுத்தப்பட்டே நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் உரிய முறையில் பேணப்படாமல் அரசாங்கம் பிரசித்தி பெற்றுக்கொள்வதற்காக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் அவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்பதோடு அவர்களின் ஓய்வூதியம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

நிதியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாககவும் அது குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதார கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபா சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் ஏனையவை தவணை முறையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சம்பள நிலுவை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு உருவாக்கப்படும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாள் வேலை மற்றும் 2500 ரூபா சம்பள உயர்வு என்பன உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்பதோடு, தொழிற்சங்கங்களும் நிறுவுநர்களும் கலந்துரையாடி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் தனியார் துறை ஊழியர்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்பவற்றை பிரதமர் மீண்டும் நினைவு கூர்ந்தார்.

வாகனங்களின் கட்டணங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்காலிக ரீதியில் சில தீர்வுகளை முன்வைப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படையில் வாகன அனுமதிப் பத்திரக் கட்டணத்தை 25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை குறைப்பதாகவும் புகைப் பரிசோதனைக்காக 1500 ரூபா இடைக்கால கட்டணம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகன மதீப்பீட்டுக் கட்டணம் 5000 ரூபாவாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கவண்டிகளுக்கான மதிப்பீட்டுக் கட்டணங்களை 3000 ரூபா வரை குறைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum