Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரவு செலவுத்திட்டம் இனங்களுக்கிடையில் சமூக ஒழுக்கங்களை உருவாக்கும்!- டக்ளஸ் தேவானந்தா

Go down

வரவு செலவுத்திட்டம் இனங்களுக்கிடையில் சமூக ஒழுக்கங்களை உருவாக்கும்!- டக்ளஸ் தேவானந்தா   Empty வரவு செலவுத்திட்டம் இனங்களுக்கிடையில் சமூக ஒழுக்கங்களை உருவாக்கும்!- டக்ளஸ் தேவானந்தா

Post by oviya Wed Dec 02, 2015 12:41 pm

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது அனைத்து இன மக்களுக்கும் சமூக ஒழுங்குகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வரவேற்கக்கூடிய பல திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதனை தான் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மிக அதிகளவாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் காரணமாகவே இவ்வாறு வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமை சுட்டியானது சில ஆபிரிக்க நாடுகளின் வறுமை சுட்டிக்கு நிகராக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதனை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதோடு கடற்தொழிலை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிறந்த ஒரு ஆட்சியை முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கத்துடன் இணங்கி செயற்படுவதாக கூறிவரும் சில அரசியல் பிரமுகர்களின் செயற்பாடு அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக டக்லஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum