Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரூ.500 கோடி போதாது...மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

Go down

ரூ.500 கோடி போதாது...மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை  Empty ரூ.500 கோடி போதாது...மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

Post by oviya Wed Nov 18, 2015 12:57 pm

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 16-11-2015 அன்று (நேற்று முன்தினம்) அவருடைய ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்றிரண்டு இடங்களை பார்வையிட்டு சென்ற பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்தும், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதும், மழைநீர் வெளியேற்றப்பட்டது குறித்துமான பூசி, மெழுகும் புள்ளிவிவரங்கள்தான் உள்ளன.

ஒரே நாளில் 27 செ.மீ. முதல் 33 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அதனால் பாதிப்பையும், சேதத்தையும் தவிர்க்க இயலவில்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார், இதையேதான் 2005-ல் 28 செ.மீ. மழை பெய்தபோதும் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளாக மழைநீர் வடிவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டுமானத்திற்காக சுமார் 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது என்னவானது?

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் நிவாரண உதவிக்கும், மறு சீரமைப்பிற்கும் 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தையும், கண்துடைப்பிற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் மழைநீர் செல்லும் பெரும்பாலான நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டும் காணாமல், நீர்வழிப்பாதையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் அனுமதி அளித்ததும், மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்கப்படாமல், தூர்வாரப்படாமல் இருப்பதும், சென்னையை சுற்றியுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாரி, கரைகள் உயர்த்தப்படாமல் இருந்ததுமே இந்த பாதிப்புகளுக்கும், சேதங்களுக்கும் முழுமுதற்காரணமாகும்.

முதலமைச்சர் ஜெயலலிதா, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பும் வகையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum