Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவிற்கு எதிராக பதாகையை காட்சிப்படுத்திய நபருக்கு நட்டஈட்டு
Page 1 of 1
மஹிந்தவிற்கு எதிராக பதாகையை காட்சிப்படுத்திய நபருக்கு நட்டஈட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்கும் வகையிலான பதாகையொன்றை காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் ஊடாக பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தங்காலை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான டெனிஸ்டர் குணசேகர என்ற நபரொருவரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்கும் வகையிலான பதாகையொன்றை தனது வீட்டிற்கு முன்பாக காட்சிப்படுத்தியிருந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த பதாகையை வெட்டி அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ள மனுதாரர், அதனூடாக தனது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இதன்படி, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த நபரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த நபருக்கு 20000 ரூபா நட்டஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தங்காலை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான டெனிஸ்டர் குணசேகர என்ற நபரொருவரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்கும் வகையிலான பதாகையொன்றை தனது வீட்டிற்கு முன்பாக காட்சிப்படுத்தியிருந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த பதாகையை வெட்டி அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ள மனுதாரர், அதனூடாக தனது கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இதன்படி, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த நபரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த நபருக்கு 20000 ரூபா நட்டஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» 12 லட்சம் மாணவர்களை ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக அணி திரட்டுவேன்!- உபுல் சாந்த சன்னஸ்கல
» புலிச் சந்தேக நபருக்கு கடூழியச் சிறை
» மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்தவிற்கு சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வ அழைப்பு
» புலிச் சந்தேக நபருக்கு கடூழியச் சிறை
» மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்தவிற்கு சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வ அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum