Top posting users this month
No user |
அம்மன் கோவிலை புனரமைப்பு செய்து இருமதத்தாரை ஒன்றிணைத்த இஸ்லாமிய பெண்
Page 1 of 1
அம்மன் கோவிலை புனரமைப்பு செய்து இருமதத்தாரை ஒன்றிணைத்த இஸ்லாமிய பெண்
மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அங்கிருந்த அம்மன் கோவிலை புனரமைப்பு செய்து கட்டி வழிபாடும் நடத்தி வருகிறார்.
மண்ட்சோர் என்ற மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுக்ரா பீ என்ற 45 வயது இஸ்லாமிய பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தினக்கூலி தொழிலாளியான அவர், இந்திரா காலனியில் பாழடைந்த நிலையில் ஒரு இந்து கோவில் இருந்ததை கண்டுள்ளார்.
அந்த கோவிலை புனரமைக்க முடிவு செய்த அவர், இது குறித்து அந்த காலனியில் உள்ள அனைத்து குடும்பங்களிடமும் உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த காலனியில் உள்ள ஒவ்வொருவரும் தலைக்கு 2 ரூபாய் வீதம் நிதி அளித்துள்ளனர்.
அந்த பணத்தை கொண்டு, அந்த கோவிலை சுக்ரா பீ காலனி மக்களுடன் இணைந்து புனரமைப்பு செய்துள்ளார்.
சுக்ரா பீ இதுகுறித்து கூறுகையில், இந்த கோவிலை கட்டியதன் மூலம் தற்போது அனைத்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து அந்த கோவிலை பராமரித்து வருகிறோம்.
மதம் நமக்கு இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தாத போது நாம் ஏன் மதத்தின் பெயரால் வேறுபாட்டை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்?
துர்க்கையம்மன் இந்த உலகின் அன்னையாக கருதப்படுகிறார். அதனால் தான் இந்த கோவிலை புனரமைப்பு செய்தோம்.
மேலும், இங்கு நவராத்திரியும் நாங்கள் இணைந்தே கொண்டாடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மண்ட்சோர் என்ற மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுக்ரா பீ என்ற 45 வயது இஸ்லாமிய பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தினக்கூலி தொழிலாளியான அவர், இந்திரா காலனியில் பாழடைந்த நிலையில் ஒரு இந்து கோவில் இருந்ததை கண்டுள்ளார்.
அந்த கோவிலை புனரமைக்க முடிவு செய்த அவர், இது குறித்து அந்த காலனியில் உள்ள அனைத்து குடும்பங்களிடமும் உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த காலனியில் உள்ள ஒவ்வொருவரும் தலைக்கு 2 ரூபாய் வீதம் நிதி அளித்துள்ளனர்.
அந்த பணத்தை கொண்டு, அந்த கோவிலை சுக்ரா பீ காலனி மக்களுடன் இணைந்து புனரமைப்பு செய்துள்ளார்.
சுக்ரா பீ இதுகுறித்து கூறுகையில், இந்த கோவிலை கட்டியதன் மூலம் தற்போது அனைத்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து அந்த கோவிலை பராமரித்து வருகிறோம்.
மதம் நமக்கு இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தாத போது நாம் ஏன் மதத்தின் பெயரால் வேறுபாட்டை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்?
துர்க்கையம்மன் இந்த உலகின் அன்னையாக கருதப்படுகிறார். அதனால் தான் இந்த கோவிலை புனரமைப்பு செய்தோம்.
மேலும், இங்கு நவராத்திரியும் நாங்கள் இணைந்தே கொண்டாடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum