Top posting users this month
No user |
Similar topics
சிறுமியின் தோற்றத்தில் காட்சியளிக்கும் மாலைக்கிழவி அம்மன்
Page 1 of 1
சிறுமியின் தோற்றத்தில் காட்சியளிக்கும் மாலைக்கிழவி அம்மன்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் அன்னையின் திருநாமம் ஸ்ரீ மாலைக்கிழவி அம்மன் சக்தி வாய்ந்தவள். சிறுமியின் தோற்றத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பாள். இந்த ஆலயம் மிகப் பழமையானது. இவ்வாலயம் 42 ஊர் துளுவ வேளாளர் உறவின் முறையாளர்களுக்கு பாத்தியப்பட்டது. வேண்டுவோருக்கு வேண்டியதை தந்து அருள்பாலிக்கும் இந்த அம்மன் மாங்கல்ய பாக்கியத்தை தந்து அருள் பாலிக்கிறாள் என்பது இதன் தனிச்சிறப்பு.
சிவபெருமான் நேரில் தோன்றி அன்னையே இவ்விடத்தில் கோயில் கொண்டு அனைத்து மக்களையும் காத்தருள்வாய் என ஆசீர்வாதித்த அம்மன். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து அன்னையை தரிசனம் செய்து செல்வார்கள். உலகளாவிய தாய் அன்னை பராசக்தியின் சொரூபமாக இந்த அன்னை விளங்குகிறாள். சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகன், குமரன்(இளைஞன்) என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு குறிஞ்சி கிழவன், தமிழ் கிழவன் என்று பெயர்கள் உண்டு.
கிழவன் என்றால் தலைவன் உரிமைகொண்டவன் என்று பொருள். கிழவி என்றால் உலகறிந்தவள், நிகரற்றவள் என்று பொருள் இது சிவன் வாக்கு. இந்த ஆலயத்தில் ஞாயிறு தோறும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெறுகிறது. அச்சமயம் அனைவரும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பெருந்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆங்கில வருடம் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி முதல் மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், பொங்கலிடுதல், முடி இறக்குதல் பின் அம்மனுக்கு நீராட்டு அபிஷேகங்கள் என அமர்களமாக விழா நடைபெறும். நாமும் அன்னை ஸ்ரீ மாலைக்கிழவி அம்மன் ஆலயம் சென்று அன்னையின் அருள் பெறுவோம்.
சிவபெருமான் நேரில் தோன்றி அன்னையே இவ்விடத்தில் கோயில் கொண்டு அனைத்து மக்களையும் காத்தருள்வாய் என ஆசீர்வாதித்த அம்மன். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து அன்னையை தரிசனம் செய்து செல்வார்கள். உலகளாவிய தாய் அன்னை பராசக்தியின் சொரூபமாக இந்த அன்னை விளங்குகிறாள். சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகன், குமரன்(இளைஞன்) என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு குறிஞ்சி கிழவன், தமிழ் கிழவன் என்று பெயர்கள் உண்டு.
கிழவன் என்றால் தலைவன் உரிமைகொண்டவன் என்று பொருள். கிழவி என்றால் உலகறிந்தவள், நிகரற்றவள் என்று பொருள் இது சிவன் வாக்கு. இந்த ஆலயத்தில் ஞாயிறு தோறும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெறுகிறது. அச்சமயம் அனைவரும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பெருந்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆங்கில வருடம் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி முதல் மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், பொங்கலிடுதல், முடி இறக்குதல் பின் அம்மனுக்கு நீராட்டு அபிஷேகங்கள் என அமர்களமாக விழா நடைபெறும். நாமும் அன்னை ஸ்ரீ மாலைக்கிழவி அம்மன் ஆலயம் சென்று அன்னையின் அருள் பெறுவோம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பில் கடும் மழை! வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் வீதிகள்
» ஆடி அம்மன் தரிசனம்
» அருள்மிகு அம்மன் திருத்தலங்கள்
» ஆடி அம்மன் தரிசனம்
» அருள்மிகு அம்மன் திருத்தலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum