Top posting users this month
No user |
Similar topics
வாகை மரம்
Page 1 of 1
வாகை மரம்
மருத்துவக் குணங்கள்: வாகை மரத்தின் பிசின், மரப் பட்டை, பூ, விதை, இலை என அனைத்திற்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. வாகையில் புரதச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும். வாகைப் பூவை சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர வாத நோய்களை குணமாக்கும். விஷங்களை முறிக்கும். வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர கண் சிவப்பு கண் எரிச்சல் குணமாகும். வாகைப் பட்டையை பொடி செய்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவு வரை வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர உள்மூலம் ரத்த மூலம் குணமாகும். வாகை மரப்பட்டையை தூளாக்கி மோரில் கலந்து குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும். வாகை மரத்தின் விதையில் இருந்து பெறப்படுகின்ற எண்ணெய், குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது. அடிபட்ட காயத்தின் மீது வாகை மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum