Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்

Go down

இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் Empty இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்

Post by oviya Sun Dec 28, 2014 2:48 pm

விலைரூ.150
ஆசிரியர் : ஜி.பாலன்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: அரசியல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 368)

இந்நூலில் 1773-ம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டம் தொடங்கி 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வரையில் கொண்டு வரப் பட்ட சட்டங்கள் பற்றியும், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட
வரலாறும் தொய்வின்றி விளக்கப் பட்டுள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், சைமன் குழுவிற்கு எதிரான போராட்டம், வட்ட மேசை மாநாடுகள், ஆகஸ்ட் அறிவிப்பு (1940), இரண்டாம் உலகப்போர், `வெள்ளையனே வெளியேறு' இயக்கம் (1942) போன்ற வரலாற்றுச் செய்திச் சுருக்கங்களும் நேர்த்தியாக கூறப்பட்டுள்ளன. `இந்தியாவிலிருந்து ஆங்கில அரசு அவமானப்பட்டு ஓடி வரும் நிலை ஏற்படும். நாமே இந்தியர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிடுவது, பிரிட்டனுக்குப் பெருமை தருவதாக இருக்கும்' (249) என்ற கிளமண்ட் அட்வி பிரபுவின் யோசனையே சுதந்திரம் பெற வழிவகுத்தது. `என் மீது விழுந்த அடிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டும் சவப்பெட்டிக்கு அடிக்கப்பட்ட ஆணிகள்' (169) என்று லாலாலஜபதிராய் கூறியது.
`நள்ளிரவில் கிரகங்களின் அமைப்புச் சாதகமாக இருக்கிறது. எனவே, அப்போது சுதந்திரம் பெறுவது நல்ல பலன்களையே ஏற்படுத்தும்' என ஜோதிடர்கள் கூறியதன் பேரில் 1947ம் ஆக., 14ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு (253) இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது போன்ற பல ருசிகரத் தகவல்களைக் கொண்ட இந்நூல் அரசியல் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும். விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கினை தமிழர்களாகிய நூலாசிரியர்களே பதிவு செய்யாமல் விட்டுவிட்டது பெரும் குறை தான். எனினும் அடுத்த பதிப்பிலாவது பதிவு செய்தால், தமிழனின் தியாகம் தரணிக்கும் புலனாகும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum