Top posting users this month
No user |
தன் குழந்தையைப் பறிகொடுத்தும் 12 பேருக்கு இழப்பீடு பெற்றுத் தந்த பெண்
Page 1 of 1
தன் குழந்தையைப் பறிகொடுத்தும் 12 பேருக்கு இழப்பீடு பெற்றுத் தந்த பெண்
மதுரையில் பெண் ஒருவர், தனது குழந்தையைப் பறிகொடுத்த போதிலும், தன்னைப் போல் பாதிக்கப்பட்ட 12 பெற்றோர்களுக்கு இழப்பீடு கிடைக்க செய்துள்ளார்.
பொம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தினகரன் (28), இவரது மனைவி மீனாட்சி (22) இருவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடைபெற்றது.
14.6.2013 அன்று, நிறைமாத கர்ப்பிணியான மீனாட்சி பிரசவத்துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மறுநாள் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை, சில மணி நேரத்தில் திருடப்பட்டது.
குழந்தையை பெண் ஒருவர் திருடிச் செல்வது மருத்துவமனை கமெராவில் பதிவாகியும், அது தெளிவாக இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மீனாட்சி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டு முதல் 42 குழந்தைகள் திருடுபோனது தெரியவந்தது.
அதில் 29 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதும், குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் 9 வழக்குகள் முடிக்கப்பட்டதும், மீனாட்சியின் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மாயமான வழக்கு நிலுவையில் இருப்பதாக உள்துறை செயலர் தெரிவித்தார்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் திருடப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், மனுதாரரின் குழந்தை உட்பட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என செப்டம்பர் 22-ல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மீனாட்சிக்கு தற்போது 2-வதாக ஆண் குழந்தை உள்ளது. மீனாட்சி கூறுகையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், இதில் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பொம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தினகரன் (28), இவரது மனைவி மீனாட்சி (22) இருவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடைபெற்றது.
14.6.2013 அன்று, நிறைமாத கர்ப்பிணியான மீனாட்சி பிரசவத்துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மறுநாள் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை, சில மணி நேரத்தில் திருடப்பட்டது.
குழந்தையை பெண் ஒருவர் திருடிச் செல்வது மருத்துவமனை கமெராவில் பதிவாகியும், அது தெளிவாக இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மீனாட்சி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டு முதல் 42 குழந்தைகள் திருடுபோனது தெரியவந்தது.
அதில் 29 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதும், குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் 9 வழக்குகள் முடிக்கப்பட்டதும், மீனாட்சியின் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மாயமான வழக்கு நிலுவையில் இருப்பதாக உள்துறை செயலர் தெரிவித்தார்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் திருடப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், மனுதாரரின் குழந்தை உட்பட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என செப்டம்பர் 22-ல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மீனாட்சிக்கு தற்போது 2-வதாக ஆண் குழந்தை உள்ளது. மீனாட்சி கூறுகையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், இதில் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum