Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தன் குழந்தையைப் பறிகொடுத்தும் 12 பேருக்கு இழப்பீடு பெற்றுத் தந்த பெண்

Go down

தன் குழந்தையைப் பறிகொடுத்தும் 12 பேருக்கு இழப்பீடு பெற்றுத் தந்த பெண் Empty தன் குழந்தையைப் பறிகொடுத்தும் 12 பேருக்கு இழப்பீடு பெற்றுத் தந்த பெண்

Post by oviya Fri Sep 25, 2015 2:15 pm

மதுரையில் பெண் ஒருவர், தனது குழந்தையைப் பறிகொடுத்த போதிலும், தன்னைப் போல் பாதிக்கப்பட்ட 12 பெற்றோர்களுக்கு இழப்பீடு கிடைக்க செய்துள்ளார்.
பொம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தினகரன் (28), இவரது மனைவி மீனாட்சி (22) இருவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடைபெற்றது.

14.6.2013 அன்று, நிறைமாத கர்ப்பிணியான மீனாட்சி பிரசவத்துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுநாள் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை, சில மணி நேரத்தில் திருடப்பட்டது.

குழந்தையை பெண் ஒருவர் திருடிச் செல்வது மருத்துவமனை கமெராவில் பதிவாகியும், அது தெளிவாக இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மீனாட்சி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டு முதல் 42 குழந்தைகள் திருடுபோனது தெரியவந்தது.

அதில் 29 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதும், குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் 9 வழக்குகள் முடிக்கப்பட்டதும், மீனாட்சியின் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மாயமான வழக்கு நிலுவையில் இருப்பதாக உள்துறை செயலர் தெரிவித்தார்.

இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் திருடப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், மனுதாரரின் குழந்தை உட்பட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என செப்டம்பர் 22-ல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மீனாட்சிக்கு தற்போது 2-வதாக ஆண் குழந்தை உள்ளது. மீனாட்சி கூறுகையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், இதில் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum