Top posting users this month
No user |
பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும்!
Page 1 of 1
பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும்!
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் முதலாம் வரைபு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும்.
மேற்கண்டவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், அடுத்துவரும் நாட்களில் இலங்கை தொடர்பான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால்,
முன்மொழியப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணையின் முதலாவது கட் டம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
கடந்த 16ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையினை வெ ளியிட்டிருக்கும் நிலையில் அதனை ஒட்டியதாகவே, பிரேரணை அமைந்திருக்கும்.
எனவே பிரேரணையில் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள விடயங்களையும், முன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலப்பு சிறப்பு நீதிமன்றம் என்ற விடயத்தையும் இலங்கை அரசாங்கம் நீக்கும் அல்லது அவற்றை நீக்கக்கோரும் சாத்தியங்கள் உள்ளன.
இந்நிலையில் அந்த விடயங்களை நீக்காது பார்த்துக் கொள்ளவும் பிரேரணை முழுமையான வடிவத்தில் வருவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கf;கூடிய அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்கண்டவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், அடுத்துவரும் நாட்களில் இலங்கை தொடர்பான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால்,
முன்மொழியப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணையின் முதலாவது கட் டம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
கடந்த 16ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையினை வெ ளியிட்டிருக்கும் நிலையில் அதனை ஒட்டியதாகவே, பிரேரணை அமைந்திருக்கும்.
எனவே பிரேரணையில் தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள விடயங்களையும், முன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலப்பு சிறப்பு நீதிமன்றம் என்ற விடயத்தையும் இலங்கை அரசாங்கம் நீக்கும் அல்லது அவற்றை நீக்கக்கோரும் சாத்தியங்கள் உள்ளன.
இந்நிலையில் அந்த விடயங்களை நீக்காது பார்த்துக் கொள்ளவும் பிரேரணை முழுமையான வடிவத்தில் வருவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கf;கூடிய அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum