Top posting users this month
No user |
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பெண் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது
Page 1 of 1
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பெண் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த துபாய் பெண் ஒருவர் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக பல நாடுகளில் உள்ள இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் சிரியாவுக்கு செல்ல முயன்ற முகைதீன் சல்மான் என்பவரை கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் விமான நிலையத்தில் போலிசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு துபாயைச் சேர்ந்த அப்ஷா ஜபீன் (எ) நிக்கோல் ஜோசப் என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துவந்ததாக தெரியவந்தது.
சிரியாவுக்கு செல்வதற்கு முன்னதாக துபாய்க்கு சென்று அப்ஷா ஜபீனை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர சல்மான் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்ஷா ஜபீன் துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வருவதாகவும் சைபராபாத் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அப்ஷா ஜபீனை சைபராபாத் பொலிசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈராக் மற்றும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக பல நாடுகளில் உள்ள இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் சிரியாவுக்கு செல்ல முயன்ற முகைதீன் சல்மான் என்பவரை கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் விமான நிலையத்தில் போலிசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு துபாயைச் சேர்ந்த அப்ஷா ஜபீன் (எ) நிக்கோல் ஜோசப் என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துவந்ததாக தெரியவந்தது.
சிரியாவுக்கு செல்வதற்கு முன்னதாக துபாய்க்கு சென்று அப்ஷா ஜபீனை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர சல்மான் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்ஷா ஜபீன் துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வருவதாகவும் சைபராபாத் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அப்ஷா ஜபீனை சைபராபாத் பொலிசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum