Top posting users this month
No user |
Similar topics
மின் வெட்டை காட்டட்டுமா? விஜயகாந்த் தடால்
Page 1 of 1
மின் வெட்டை காட்டட்டுமா? விஜயகாந்த் தடால்
வேலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு வாழ்வாதார நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூரில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவித தொழிலும் முன்னேற்றம் அடையவில்லை.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் பதனிடுதல் தொழில் மிகவும் நசிந்து விட்டது. தோல் உற்பத்தி தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எந்தத் திட்டங்களும் இதுவரை நிறைவேற்றவில்லை.
உதாரணத்துக்கு உடன்குடியில் ரூ. 8 ஆயிரம் கோடியில் அறிவிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் அறிவித்த நிலையிலேயே உள்ளது. வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர்.
மக்களுக்காக மட்டும் உழைக்க வேண்டிய பொலிசார், ஆளும் அரசுக்கு பயந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை மிக மோசமாக உள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ''வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என்றார். என் தொகுதிக்கு வாங்க மின் வெட்டை காட்டட்டுமா? என்று கூறியுள்ளார்.
இந்த விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவித தொழிலும் முன்னேற்றம் அடையவில்லை.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் பதனிடுதல் தொழில் மிகவும் நசிந்து விட்டது. தோல் உற்பத்தி தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எந்தத் திட்டங்களும் இதுவரை நிறைவேற்றவில்லை.
உதாரணத்துக்கு உடன்குடியில் ரூ. 8 ஆயிரம் கோடியில் அறிவிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் அறிவித்த நிலையிலேயே உள்ளது. வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர்.
மக்களுக்காக மட்டும் உழைக்க வேண்டிய பொலிசார், ஆளும் அரசுக்கு பயந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை மிக மோசமாக உள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ''வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கலாம்.
ஆனால், தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என்றார். என் தொகுதிக்கு வாங்க மின் வெட்டை காட்டட்டுமா? என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum