Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை: பொலிசில் கணவர் வினோத புகார்

Go down

கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை: பொலிசில் கணவர் வினோத புகார் Empty கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை: பொலிசில் கணவர் வினோத புகார்

Post by oviya Fri Aug 28, 2015 4:20 pm

திருச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வயிற்றில் இருந்த குழந்தை மாயமானதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (39), சங்கீதா இருவருக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம் திகதி திருமணம் நடந்தது.

இதையடுத்து சில நாட்களில் கர்ப்பமடைந்த சங்கீதா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்து தருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிசார் கூறுகையில், பிரசவ திகதி ஆகஸ்ட் 9 என மருத்துவர்கள் கூறியதாக சங்கீதா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆகஸ்ட் 9ம் திகதி, கணவருக்கு போன் செய்து பிரசவம் இன்றில்லை குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை ஸ்கேன் செய்ய அழைத்தும் சங்கீதா மறுத்துள்ளார்.

பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வந்துள்ளது.

இதையடுத்து கஜேந்திரன் பொலிசில் புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

சங்கீதாவிடம் நடந்த விசாரணையில், குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்ததால் பொலிசார் குழப்பமடைந்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum