Top posting users this month
No user |
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த்
Page 1 of 1
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் அவரது கட்சிக்காரர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இன்று (25.08.2015) எனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல், E-Post ஆகியவற்றின் மூலமாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரையுலகில் இருந்த காலத்தில் என்னுடைய இயக்கம் ரசிகர் மன்றங்களாக இருந்தபோது பிறந்தநாள் விழாவாகவும், தேமுதிக அரசியல் இயக்கமாக மலர்ந்தபோது வறுமை ஒழிப்பு தினமாகவும் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் பொது மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறேன்.
வறுமை ஒழிப்பு தினத்தை தமிழகமெங்கும் செயல்படுத்தி பல லட்சக்கணக்கான மக்களுக்கு நலஉதவிகள் பலவற்றை செய்த தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுச்செயலளர் முரளிதரராவ், திலீப்ஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் மற்றும் ஜெ.எம்.ஆரூண், கராத்தே தியாகராஜன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி செயல்தலைவர் ரவிபச்சமுத்து, தென் இந்திய திருச்சபை பேராயர் எஸ்றா.சற்குணம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ், கோகுலம் மக்கள் கட்சித்தலைவர் சேகர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், எஸ்.வி.சேகர், மேல்மருவத்தூர் செந்தில்குமார் பங்காருஅடிகளார், திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் அவரது கட்சிக்காரர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இன்று (25.08.2015) எனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, வாழ்த்து கடிதங்கள், மின்னஞ்சல், E-Post ஆகியவற்றின் மூலமாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரையுலகில் இருந்த காலத்தில் என்னுடைய இயக்கம் ரசிகர் மன்றங்களாக இருந்தபோது பிறந்தநாள் விழாவாகவும், தேமுதிக அரசியல் இயக்கமாக மலர்ந்தபோது வறுமை ஒழிப்பு தினமாகவும் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் பொது மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறேன்.
வறுமை ஒழிப்பு தினத்தை தமிழகமெங்கும் செயல்படுத்தி பல லட்சக்கணக்கான மக்களுக்கு நலஉதவிகள் பலவற்றை செய்த தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுச்செயலளர் முரளிதரராவ், திலீப்ஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் மற்றும் ஜெ.எம்.ஆரூண், கராத்தே தியாகராஜன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி செயல்தலைவர் ரவிபச்சமுத்து, தென் இந்திய திருச்சபை பேராயர் எஸ்றா.சற்குணம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ், கோகுலம் மக்கள் கட்சித்தலைவர் சேகர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, மாநில செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன், எஸ்.வி.சேகர், மேல்மருவத்தூர் செந்தில்குமார் பங்காருஅடிகளார், திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum