Top posting users this month
No user |
Similar topics
சோம்பு
Page 1 of 1
சோம்பு
சோம்பு:
மருத்துவ குணங்கள்:
- சோம்பு மெலிந்த தோற்றமுடைய செடி ஆகும். இதனை கிரேக்க மொழியில் ”மெலிந்தது” என்பர்.
- ரோமானியர் வைக்கோல் போன்ற இலேசான கனமுள்ள செடி என்னும் கருத்தைக்கொண்டு “ஃபென்னல்” என்னும் சொல்லால் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
- ”பெருஞ்சீரகம்” என்ற மறுபெயரும் உண்டு. இதன் கன்னடப்பெயர் ”டோட்டா சோம்பு”, ஹிந்திப்பெயர் ”சோம்ப்”.
- இத்தகைய பெயர்களை உடைய சோம்பானது மருத்துவக்குணங்களையும் பெற்றுள்ளது.
- அவற்றில் ஒன்றுதான் குழந்தை மருத்துவம். குழந்தையின் உடலமைப்பும், நோய்களும் தனித்தன்மை வாய்ந்தது.
- ”ஆண்டிபயோடிக்” போன்ற கிருமி கொல்லும் மருந்துகளை குழந்தைகளின் உடல் அதிக அளவில் ஏற்றுக்கொள்கிறது.
- ஆனால் பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் உடல் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
- இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த சோம்பானது குழந்தைகளின் ஜீரண பிணிகளுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.
- சோம்பு கஷாயம் கண்களை சுத்தம் செய்யும் லோஷனாக பயன்படுகிறது. இதனை உட்கொண்டால் கண்கள் பலப்படும்.
- நீரழிவு நோய்க்கு இவை துணை மருந்தாக உள்ளது. குழந்தை மருத்துவ துறையில் கண் மருத்துவத்திற்கு நேரடியாகவும், நீரழிவு சிகி்ச்சையில் துணையாகவும் சோம்பு பயன்படுகிறது.
- சோம்பின் விதைகளும், வேர்களும் உணவு வகைகள் மற்றும் பானங்களில் அதிகம் பயன்படுத்தினால் பருமனிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
- மத்திய தரைக்கடலிலிருந்து இந்தியா வரை சோம்பு பரவலாக பயிராகிறது.ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது.
- இதன் சிறிய பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்கள் இனிய தோற்றமளிக்கும். இதனை வைத்து தோட்டத்தையும், பாதைகளையும் அழகுப்படுத்தலாம்.
- சோம்பு விதையில் ஆவியாகும் தைலச்சத்து முக்கியமான பொருள். அனீதோல், சோம்பு ஃபென்கோன் முதலியவை அதி்ல் அடங்கியுள்ளன.
- மேலும் டி- பினைன், பெல்லாண்ட்ரின், அனிஸிக் அமிலம், அனிஸிக் ஆல்டிஹைட், லிமோனின் முதலிய பொருள்கள் உள்ளன. அனீதோல் 60 சதவீதமும், ஃபெனிகோன் 20 சதவீதமும், புரதம் 20 சதவீதமும் உள்ளன.
- இவைகள் சோம்பில் மணத்தையும், சுவையையும் ஏற்படுத்துகின்றன.
மருத்துவ குணங்கள்:
- சோம்பு ஜீரண பாதைக்கு சுறுசுறுப்பு தருகிறது.
- அஜீரண வாயுவை நீக்குகிறது.
- இரப்பையின் குறைபாடுகளை சரி செய்கிறது.
- சோம்புவின் இலையும், விதையும் இரப்பை சம்பந்தமான நோய், சுரம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
- பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒற்றடம்தர பயன்படுத்தலாம்.
- மூளைக்கு சுறுசுறுப்பு தந்து, ஞாபக சக்தியை அதிகரித்து, கண்ணுக்கு பலன் தரும்.
- சோம்பு இலையின் பிழிந்த சாற்றை வெந்நீரில் கலக்கி கண்ணை கழுவும் லோஷனாக பயன்படுத்தலாம்.
- அதிக அளவில் உபயோகித்தால் மாதவிடாயை தூண்டிவிடும்.
- சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றுக் கிருமிகளை ஒழிக்கும்.
- பருமனைக் குறைக்கும். குழந்தைகளின் அஜீரணம் போக்கும்.
- நீரழிவு நோய்க்கு துணை மருந்தாக சோம்பு பயன்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum