Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சோம்பு

Go down

சோம்பு                 Empty சோம்பு

Post by oviya Sat Aug 22, 2015 2:10 pm

சோம்பு:

  • சோம்பு மெலிந்த தோற்றமுடைய செடி ஆகும். இதனை கிரேக்க மொழியில் ”மெலிந்தது” என்பர்.

  • ரோமானியர் வைக்கோல் போன்ற இலேசான கனமுள்ள செடி என்னும் கருத்தைக்கொண்டு  “ஃபென்னல்” என்னும் சொல்லால் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

  • ”பெருஞ்சீரகம்” என்ற மறுபெயரும் உண்டு.  இதன் கன்னடப்பெயர் ”டோட்டா சோம்பு”, ஹிந்திப்பெயர் ”சோம்ப்”.

  • இத்தகைய பெயர்களை உடைய சோம்பானது மருத்துவக்குணங்களையும் பெற்றுள்ளது.

  • அவற்றில் ஒன்றுதான்  குழந்தை மருத்துவம். குழந்தையின் உடலமைப்பும், நோய்களும் தனித்தன்மை வாய்ந்தது.

  • ”ஆண்டிபயோடிக்” போன்ற கிருமி கொல்லும் மருந்துகளை குழந்தைகளின் உடல் அதிக அளவில் ஏற்றுக்கொள்கிறது.

  • ஆனால் பெரியவர்கள் மற்றும் முதியவர்களின்  உடல் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

  • இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த சோம்பானது குழந்தைகளின் ஜீரண பிணிகளுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

  • சோம்பு கஷாயம் கண்களை சுத்தம் செய்யும்  லோஷனாக பயன்படுகிறது. இதனை உட்கொண்டால் கண்கள் பலப்படும்.

  • நீரழிவு நோய்க்கு இவை துணை மருந்தாக உள்ளது. குழந்தை மருத்துவ துறையில் கண் மருத்துவத்திற்கு நேரடியாகவும், நீரழிவு சிகி்ச்சையில் துணையாகவும் சோம்பு பயன்படுகிறது.

  • சோம்பின் விதைகளும், வேர்களும் உணவு வகைகள் மற்றும் பானங்களில் அதிகம் பயன்படுத்தினால் பருமனிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.

  • மத்திய தரைக்கடலிலிருந்து இந்தியா வரை சோம்பு பரவலாக பயிராகிறது.ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது.

  • இதன் சிறிய பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்கள் இனிய தோற்றமளிக்கும். இதனை வைத்து தோட்டத்தையும், பாதைகளையும் அழகுப்படுத்தலாம்.

  • சோம்பு விதையில் ‌ஆவியாகும் தைலச்சத்து முக்கியமான பொருள். அனீதோல், சோம்பு ஃபென்கோன் முதலியவை அதி்ல் அடங்கியுள்ளன.

  • மேலும் டி- பினைன், பெல்லாண்ட்ரின், அனிஸிக் அமிலம், அனிஸிக் ஆல்டிஹைட், லிமோனின் முதலிய பொருள்கள் உள்ளன. அனீதோல் 60 சதவீதமும், ஃபெனிகோன் 20 சதவீதமும், புரதம் 20 சதவீதமும் உள்ளன.

  • இவைகள் சோம்பில் மணத்தையும், சுவையையும் ஏற்படுத்துகின்றன.


மருத்துவ குணங்கள்:

  • சோம்பு ஜீரண பாதைக்கு சுறுசுறுப்பு தருகிறது.

  • அஜீரண வாயுவை நீக்குகிறது.

  • இரப்பையின் குறைபாடுகளை சரி செய்கிறது.

  • சோம்புவின் இலையும், விதையும் இரப்பை சம்பந்தமான நோய், சுரம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.

  • பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒற்றடம்தர பயன்படுத்தலாம்.

  • மூளைக்கு சுறுசுறுப்பு தந்து, ஞாபக சக்தியை அதிகரித்து, கண்ணுக்கு பலன் தரும்.

  • சோம்பு இலையின் பிழிந்த சாற்றை வெந்நீரில் கலக்கி கண்ணை கழுவும் லோஷனாக பயன்படுத்தலாம்.

  • அதிக அளவில் உபயோகித்தால் மாதவிடாயை தூண்டிவிடும்.

  • சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றுக் கிருமிகளை ஒழிக்கும்.

  • பருமனைக் குறைக்கும். குழந்தைகளின் அஜீரணம் போக்கும்.

  • நீரழிவு நோய்க்கு துணை மருந்தாக சோம்பு பயன்படுகிறது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum