Top posting users this month
No user |
காந்தியை பின்பற்ற வேண்டும்: ஓடியோ பதிவில் குறிப்பிட்ட பின்லேடன்
Page 1 of 1
காந்தியை பின்பற்ற வேண்டும்: ஓடியோ பதிவில் குறிப்பிட்ட பின்லேடன்
காந்தியை பின்பற்ற வேண்டும் என்று பின்லேடன் குறிப்பிட்டதாக புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஃபிலாக் மிரர் என்ற அரேபிய இலக்கிய நிபுணரின் 'பயமற்ற துறவி' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், பின்லேடன் உள்பட பல்வேறு நபர்கள், கடந்த 1960களின் பிற்பகுதி முதல் 2001ம் ஆண்டு வரையிலான 200 ஓடியோ பதிவுகள் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
அதில் இருந்த பின்லேடனின் ஓடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், கடந்த 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவான ஒரு பதிவில், 'சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று இங்கிலாந்தை சொல்வார்கள்.
அப்படிப்பட்ட நாடு, தனது மாபெரும் காலனி நாட்டில் (இந்தியா) இருந்து வெளியேறியது.
அதற்கு இந்துவான காந்தி, இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்குமாறு சொன்னதுதான் காரணம். அவரை பின்பற்றி, நாமும் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 1996 ம் ஆண்டு வரையிலான பின்லேடனின் ஓடியோ பதிவுகளில், எந்த வன்முறையும் காணப்படவில்லை.
சூடானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்பே, அவரது போக்கில் மாற்றம் தென்பட்டது என்று அந்தப் புத்தகத்தில் ஃபிலாக் மிரர் கூறியுள்ளது குறிபிடத்தக்கது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஃபிலாக் மிரர் என்ற அரேபிய இலக்கிய நிபுணரின் 'பயமற்ற துறவி' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், பின்லேடன் உள்பட பல்வேறு நபர்கள், கடந்த 1960களின் பிற்பகுதி முதல் 2001ம் ஆண்டு வரையிலான 200 ஓடியோ பதிவுகள் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
அதில் இருந்த பின்லேடனின் ஓடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், கடந்த 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவான ஒரு பதிவில், 'சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று இங்கிலாந்தை சொல்வார்கள்.
அப்படிப்பட்ட நாடு, தனது மாபெரும் காலனி நாட்டில் (இந்தியா) இருந்து வெளியேறியது.
அதற்கு இந்துவான காந்தி, இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்குமாறு சொன்னதுதான் காரணம். அவரை பின்பற்றி, நாமும் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 1996 ம் ஆண்டு வரையிலான பின்லேடனின் ஓடியோ பதிவுகளில், எந்த வன்முறையும் காணப்படவில்லை.
சூடானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்பே, அவரது போக்கில் மாற்றம் தென்பட்டது என்று அந்தப் புத்தகத்தில் ஃபிலாக் மிரர் கூறியுள்ளது குறிபிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum