Top posting users this month
No user |
Similar topics
பல விஞ்ஞானிகளை உருவாக்கும் கலாமின் செயல்பாடு!
Page 1 of 1
பல விஞ்ஞானிகளை உருவாக்கும் கலாமின் செயல்பாடு!
கடைகோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு சாதாரண மாணவனுக்கும் அறிவியல் வினோதங்களின் மீதான ஆர்வமும், கொஞ்சம் அதுக்கு உந்துதலான சூழலும் அமைந்தால் போதும்.
அதோடு அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும் உழைப்பும் சேர்ந்துவிட்டால். நிச்சயமாக ஆண்டுக்கு பல விஞ்ஞானிகளை நம் பாரதமும் பெற்றுக்கொண்டிருக்கும்.
சமீபத்தில், பெங்களூருவில் தூய அல்போன்சா உயர்நிலை பள்ளி மற்றும் எல்லையில்லா பொறியியலாளர்கள் பெங்களூரு கிளை சார்பில், அறிவியல் மன்றம் ஒன்று பென்சன்டவுனில் திறக்கப்பட்டது.
அந்த அறிவியல் மன்றம் சனிக்கிழமை பாடம் என்ற பெயரில் சனிக்கிழமை தோறும் அறிவியல் பாடம் நடத்துகிறது. இதை தொடங்கி வைத்து பேசிய, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி வி. டில்லிபாபு.
அதில் பேசிய அவர், விண்வெளி மற்றும் விமான துறையில் இந்தியாவின் சாதனைகள் மகத்தானது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நமது தொழிநுட்பத் திறனை உலகுக்கு பறைசாற்றுகிறது என்றார்.
மேலும், இளம் வயதிலே அறிவியல் மீது நாட்டம்கொள்வது நல்லது. செய்முறைகள் மூலம் அறிவியல் வினைகளை மாணவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினால் போதும், அறிவியலில் அடுத்தகட்ட முன்னேற்ற நிலைக்கு இந்தியா அடியெடுத்து வைக்கும் முதற்படியாக அது அமையும்.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவது வளமான இந்தியாவுக்கு நல்லது.
மாணவர்களும் அறிவியலை ஆர்வமாக கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்திய அளவில் அறியலில் போட்டிபோடும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதியிலும் எங்கள் அமைப்பு உதவும் இந்த சனிக்கிழமை பாடம் மேலும் பல பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
விஞ்ஞானி டில்லிபாபுவும் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை போலவே மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை விதைக்கும் பணியில் ஈடுபடுகிறார் என்பது ஒரு நல்ல விஷயம்.
அப்துல் கலாம் இறந்தபோது, ஒரு விஞ்ஞானியின் எல்லைகளையும் கடந்து ஒரு நாட்டின் பெரிய அரசியல் தலைவர், பெரிய சினிமா நடிகர், பெரிய விளையாட்டு வீரர் இறந்ததுபோல இளைஞர்கள் உட்பட எல்லா தரப்பினரையும் துக்கத்தில் பங்கெடுக்க வைத்தது.
ஒரு காலத்தில் விஞ்ஞானிகள் என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள்தான் நமக்கு அந்த அறிவு தகுதியே கிடையாது என்று, இந்தியர்களே தங்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். சர்.சி.வி.ராமன் போல ஓரிருவர் மட்டுமே தப்பிப் பிறந்ததாக நினைத்தனர்.
உலக அளவில் சாதனை புரியாவிட்டாலும் விண்வெளி போன்ற அறிவியல் துறையில் சிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து பணிபுரிந்தே வந்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் எல்லாம் மக்களோடும் மாணவர்களோடும் அவ்வளவு தொடர்புகொள்ளவில்லை.
விஞ்ஞானிகள் என்ற கர்வத்தோடு சம்பந்தப்பட்ட பெரிய அதிகாரிகளோடு மட்டுமே நெருக்கம் கொண்டிருந்தனர்.
அந்த சம்பிரதாய வழக்கத்தை உடைத்தெறிந்தவர் ஐயா அப்துல் கலாம்தான். அதுதான் அவருடைய அணுகுண்டு சாதனையைவிடவும் மக்களிடம் புரட்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தன்னை புரிந்துகொள்ளாமலே விஞ்ஞானியாகும் முயற்சிக்கு நடுங்கினர்.
அதுக்கு, காரணம் அதை பெரிய விஷயமாகவும் வியப்பாகவும் பதிய வைத்த, அவர்களுக்கு முன்னால் இருந்த அறிவியல் அறிஞர்களின் நடவடிக்கைகள்தான்.
அந்த மாயை திரையை விலக்கி விஞ்ஞானிகளாக யாரும் பிறக்கவில்லை எல்லோருமே உருவானவர்கள்தான் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டியதுதான் அப்துல் கலாமின் அரும்பணி.
மலைப்பாக நினைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகள் இப்போது அந்நிலைமாறி, சாமானியர்களும் முயன்றால் வெற்றிபெற முடிகிறது.
அதுபோல, இனி விஞ்ஞானிகளும் நிறைவார்கள், அவர்களில் சிலர் உலக அளவிலும் உயர்வார்கள் இது நிச்சயம்!
அதோடு அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும் உழைப்பும் சேர்ந்துவிட்டால். நிச்சயமாக ஆண்டுக்கு பல விஞ்ஞானிகளை நம் பாரதமும் பெற்றுக்கொண்டிருக்கும்.
சமீபத்தில், பெங்களூருவில் தூய அல்போன்சா உயர்நிலை பள்ளி மற்றும் எல்லையில்லா பொறியியலாளர்கள் பெங்களூரு கிளை சார்பில், அறிவியல் மன்றம் ஒன்று பென்சன்டவுனில் திறக்கப்பட்டது.
அந்த அறிவியல் மன்றம் சனிக்கிழமை பாடம் என்ற பெயரில் சனிக்கிழமை தோறும் அறிவியல் பாடம் நடத்துகிறது. இதை தொடங்கி வைத்து பேசிய, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி வி. டில்லிபாபு.
அதில் பேசிய அவர், விண்வெளி மற்றும் விமான துறையில் இந்தியாவின் சாதனைகள் மகத்தானது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நமது தொழிநுட்பத் திறனை உலகுக்கு பறைசாற்றுகிறது என்றார்.
மேலும், இளம் வயதிலே அறிவியல் மீது நாட்டம்கொள்வது நல்லது. செய்முறைகள் மூலம் அறிவியல் வினைகளை மாணவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினால் போதும், அறிவியலில் அடுத்தகட்ட முன்னேற்ற நிலைக்கு இந்தியா அடியெடுத்து வைக்கும் முதற்படியாக அது அமையும்.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவது வளமான இந்தியாவுக்கு நல்லது.
மாணவர்களும் அறிவியலை ஆர்வமாக கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்திய அளவில் அறியலில் போட்டிபோடும் மாணவர்களுக்கு பொருளாதார ரீதியிலும் எங்கள் அமைப்பு உதவும் இந்த சனிக்கிழமை பாடம் மேலும் பல பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
விஞ்ஞானி டில்லிபாபுவும் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை போலவே மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை விதைக்கும் பணியில் ஈடுபடுகிறார் என்பது ஒரு நல்ல விஷயம்.
அப்துல் கலாம் இறந்தபோது, ஒரு விஞ்ஞானியின் எல்லைகளையும் கடந்து ஒரு நாட்டின் பெரிய அரசியல் தலைவர், பெரிய சினிமா நடிகர், பெரிய விளையாட்டு வீரர் இறந்ததுபோல இளைஞர்கள் உட்பட எல்லா தரப்பினரையும் துக்கத்தில் பங்கெடுக்க வைத்தது.
ஒரு காலத்தில் விஞ்ஞானிகள் என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள்தான் நமக்கு அந்த அறிவு தகுதியே கிடையாது என்று, இந்தியர்களே தங்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். சர்.சி.வி.ராமன் போல ஓரிருவர் மட்டுமே தப்பிப் பிறந்ததாக நினைத்தனர்.
உலக அளவில் சாதனை புரியாவிட்டாலும் விண்வெளி போன்ற அறிவியல் துறையில் சிறந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து பணிபுரிந்தே வந்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் எல்லாம் மக்களோடும் மாணவர்களோடும் அவ்வளவு தொடர்புகொள்ளவில்லை.
விஞ்ஞானிகள் என்ற கர்வத்தோடு சம்பந்தப்பட்ட பெரிய அதிகாரிகளோடு மட்டுமே நெருக்கம் கொண்டிருந்தனர்.
அந்த சம்பிரதாய வழக்கத்தை உடைத்தெறிந்தவர் ஐயா அப்துல் கலாம்தான். அதுதான் அவருடைய அணுகுண்டு சாதனையைவிடவும் மக்களிடம் புரட்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தன்னை புரிந்துகொள்ளாமலே விஞ்ஞானியாகும் முயற்சிக்கு நடுங்கினர்.
அதுக்கு, காரணம் அதை பெரிய விஷயமாகவும் வியப்பாகவும் பதிய வைத்த, அவர்களுக்கு முன்னால் இருந்த அறிவியல் அறிஞர்களின் நடவடிக்கைகள்தான்.
அந்த மாயை திரையை விலக்கி விஞ்ஞானிகளாக யாரும் பிறக்கவில்லை எல்லோருமே உருவானவர்கள்தான் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டியதுதான் அப்துல் கலாமின் அரும்பணி.
மலைப்பாக நினைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகள் இப்போது அந்நிலைமாறி, சாமானியர்களும் முயன்றால் வெற்றிபெற முடிகிறது.
அதுபோல, இனி விஞ்ஞானிகளும் நிறைவார்கள், அவர்களில் சிலர் உலக அளவிலும் உயர்வார்கள் இது நிச்சயம்!
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உறவுகளை உருவாக்கும் கலை
» நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!
» அப்துல் கலாமின் அரிய கருத்துக்கள்
» நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!
» அப்துல் கலாமின் அரிய கருத்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum