Top posting users this month
No user |
Similar topics
காய்கறி கட்லெட்
Page 1 of 1
காய்கறி கட்லெட்
காரட் - 100 கிராம்
பீட்ரூட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
பிரெட் - 6
பெரிய வெங்காயம் - 2
குடை மிளகாய் - பாதி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
புதினா - அரை கப்
காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகளை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டங்களை வேக வைத்து எடுக்கவும்.
நன்கு வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மையப் பிசையவும்.
பிறகு அதில் வெங்காயம், குடை மிளகாய், புதினா போட்டு பிசைந்து கொள்ளவும்.
பிரெட்டின் ஓர பகுதிகளை நீக்கி விட்டு நடு பகுதியை எடுத்து தண்ணீரில் தோய்த்து, இரண்டு கைகளாலும் அழுத்தி நீரைப் பிழியவும்.
பிறகு அந்த ப்ரெட்டையும் காய்களுடன் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
அதில் கறி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு மாவாக பிசைந்துக் கொள்ளவும்.
கலவையை உருண்டையாக உருட்டி கட்லெட் அச்சில் வைத்து தட்டி விட்டு ஓரத்தில் உள்ள மாவை எடுத்து விடவும்.
இதனை ஒரு ப்ளாஸ்டிக் பேப்பர் மீது செய்தால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும். பிறகு கட்லெட் உடையாமல் அச்சில் இருந்து பிரித்து எடுக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி, கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும்.
கட்லெட் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இருபுறமும் லேசாக சிவக்க ஆரம்பித்ததும் எடுத்துவிடவும். இதனை தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பீட்ரூட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
பிரெட் - 6
பெரிய வெங்காயம் - 2
குடை மிளகாய் - பாதி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
புதினா - அரை கப்
காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா இலைகளை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டங்களை வேக வைத்து எடுக்கவும்.
நன்கு வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மையப் பிசையவும்.
பிறகு அதில் வெங்காயம், குடை மிளகாய், புதினா போட்டு பிசைந்து கொள்ளவும்.
பிரெட்டின் ஓர பகுதிகளை நீக்கி விட்டு நடு பகுதியை எடுத்து தண்ணீரில் தோய்த்து, இரண்டு கைகளாலும் அழுத்தி நீரைப் பிழியவும்.
பிறகு அந்த ப்ரெட்டையும் காய்களுடன் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
அதில் கறி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு மாவாக பிசைந்துக் கொள்ளவும்.
கலவையை உருண்டையாக உருட்டி கட்லெட் அச்சில் வைத்து தட்டி விட்டு ஓரத்தில் உள்ள மாவை எடுத்து விடவும்.
இதனை ஒரு ப்ளாஸ்டிக் பேப்பர் மீது செய்தால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும். பிறகு கட்லெட் உடையாமல் அச்சில் இருந்து பிரித்து எடுக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி, கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும்.
கட்லெட் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இருபுறமும் லேசாக சிவக்க ஆரம்பித்ததும் எடுத்துவிடவும். இதனை தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum