Top posting users this month
No user |
Similar topics
மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வதில் தவறில்லை: பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்
Page 1 of 1
மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வதில் தவறில்லை: பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்
மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வது கணவருக்கு மனரீதியிலான சித்ரவதை அல்ல என மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த தம்பதியர் ஒருவருக்கு கடந்த 1999ல் திருமணம் நடந்துள்ளது.
தற்போது 2 குழந்தைகள் உள்ள அந்த தம்பதியருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2008ம் ஆண்டு விவாகரத்து கேட்டு மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் வீடு திரும்புகிறார்.
என்னிடம் அதிகம் கோபப்படுகிறார். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி 2011ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
ஆனால் இதனை ஏற்காத மனைவி, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து அந்த கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கூறுகையில், இன்றைய சமுதாயத்தில், இதுபோன்ற விருந்துக்கு செல்வது ஓரளவுக்கு அனுமதிக்கத்தக்கதுதான்.
இந்த வழக்கை பொறுத்தவரை கணவன், மனைவி இருவருமே சாதாரணமான வாழ்க்கையை நடத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இருவருமே விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
எனவே இந்த வழக்கில் கணவரை மனைவி சித்ரவதை செய்கிறார் என்று கூறி ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.
குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தவறு செய்து விட்டது என்று கூறி கணவரின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த தம்பதியர் ஒருவருக்கு கடந்த 1999ல் திருமணம் நடந்துள்ளது.
தற்போது 2 குழந்தைகள் உள்ள அந்த தம்பதியருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2008ம் ஆண்டு விவாகரத்து கேட்டு மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் மனைவி அடிக்கடி நள்ளிரவு விருந்துக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் வீடு திரும்புகிறார்.
என்னிடம் அதிகம் கோபப்படுகிறார். எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி 2011ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
ஆனால் இதனை ஏற்காத மனைவி, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து அந்த கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கூறுகையில், இன்றைய சமுதாயத்தில், இதுபோன்ற விருந்துக்கு செல்வது ஓரளவுக்கு அனுமதிக்கத்தக்கதுதான்.
இந்த வழக்கை பொறுத்தவரை கணவன், மனைவி இருவருமே சாதாரணமான வாழ்க்கையை நடத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இருவருமே விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
எனவே இந்த வழக்கில் கணவரை மனைவி சித்ரவதை செய்கிறார் என்று கூறி ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.
குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தவறு செய்து விட்டது என்று கூறி கணவரின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனைவி நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வதில் தவறில்லை: பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்
» மனிதர்களுக்காக தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை: உச்ச நீதிமன்றம்
» முதலிரவில் ஆபாச படம் எடுத்த கணவன்: மனைவி பரபரப்பு புகார்
» மனிதர்களுக்காக தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை: உச்ச நீதிமன்றம்
» முதலிரவில் ஆபாச படம் எடுத்த கணவன்: மனைவி பரபரப்பு புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum