Top posting users this month
No user |
Similar topics
ராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவிக்கு ஐம்பொன்னில் சிலை
Page 1 of 1
ராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவிக்கு ஐம்பொன்னில் சிலை
ராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவிக்கு சுவாமிமலையில் ஐம்பொன்னில் சிலை வடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி மக்கள் செம்பியன் மாதேவி தங்கள் ஊரில் பிறந்தவர் என்று உறுதிபட நம்புகிறார்கள்.
அதற்காகவே அவருக்கு தங்கள் ஊரில் ஐம்பொன் சிலை எடுக்கிறார்கள்.
சிலை அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.சந்திரசேகர் கூறுகையில், செம்பியன் மாதேவி எங்கள் ஊரில் பிறந்தவர். பக்கத்திலுள்ள கண்டராதித்தத்தில்தான் அவரை திருமணம் முடித்த கண்டராதித்த சோழன் வசித்திருக்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் பிறந்த அந்த வரலாற்று நாயகிக்கு சிலை வைக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் எடுத்த முடிவு.
நாங்கள் சிலை வைக்கும் பணியை தொடங்கும் முன்பாக, ஊரிலிருந்து நூறு பேர் சீர் எடுத்துச் சென்று செம்பியன் மாதேவியிலுள்ள செம்பியன் மாதேவி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தோம்.
மக்கள் தங்களிடமிருந்த பித்தளை, வெண்கலம், வெள்ளி உள்ளிட்ட பாத்திரங்களையும் 2 சவரன் தங்கத்தையும் சிலைக்காக கொடுத்தார்கள்.
மொத்தம் சுமார் 450 கிலோ வுக்கு ஐம்பொன்னும் ஒரு லட்ச ரூபாய் நிதியும் திரட்டப்பட்டது.
ஆறே முக்கால் அடியில் தயாராகும் இந்த சிலையை டிசம்பர் மாதம் எங்கள் ஊரில் நிறுவி அந்த இடத்தில் பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறோம்.
இனி ஆண்டுதோறும் எங்கள் ஊரில் அவரது பிறந்த நாளை விழாவாக கொண்டாட தீர்மானித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி மக்கள் செம்பியன் மாதேவி தங்கள் ஊரில் பிறந்தவர் என்று உறுதிபட நம்புகிறார்கள்.
அதற்காகவே அவருக்கு தங்கள் ஊரில் ஐம்பொன் சிலை எடுக்கிறார்கள்.
சிலை அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.சந்திரசேகர் கூறுகையில், செம்பியன் மாதேவி எங்கள் ஊரில் பிறந்தவர். பக்கத்திலுள்ள கண்டராதித்தத்தில்தான் அவரை திருமணம் முடித்த கண்டராதித்த சோழன் வசித்திருக்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் பிறந்த அந்த வரலாற்று நாயகிக்கு சிலை வைக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் எடுத்த முடிவு.
நாங்கள் சிலை வைக்கும் பணியை தொடங்கும் முன்பாக, ஊரிலிருந்து நூறு பேர் சீர் எடுத்துச் சென்று செம்பியன் மாதேவியிலுள்ள செம்பியன் மாதேவி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தோம்.
மக்கள் தங்களிடமிருந்த பித்தளை, வெண்கலம், வெள்ளி உள்ளிட்ட பாத்திரங்களையும் 2 சவரன் தங்கத்தையும் சிலைக்காக கொடுத்தார்கள்.
மொத்தம் சுமார் 450 கிலோ வுக்கு ஐம்பொன்னும் ஒரு லட்ச ரூபாய் நிதியும் திரட்டப்பட்டது.
ஆறே முக்கால் அடியில் தயாராகும் இந்த சிலையை டிசம்பர் மாதம் எங்கள் ஊரில் நிறுவி அந்த இடத்தில் பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறோம்.
இனி ஆண்டுதோறும் எங்கள் ஊரில் அவரது பிறந்த நாளை விழாவாக கொண்டாட தீர்மானித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum