Top posting users this month
No user |
நாளைய தலைமுறையை நசுக்கலாமா? ஆசிரியர்களை திருத்துவது யார்
Page 1 of 1
நாளைய தலைமுறையை நசுக்கலாமா? ஆசிரியர்களை திருத்துவது யார்
ஆயிரம் துறைகள் இருந்தாலும் மக்களால் மரியாதையாக பார்க்கப்படும் பணிகள் மருத்துவர், ராணுவ வீரர், ஆசிரியர் ஆகியவையேயாகும்.
எல்லா துறைகளிலுமே தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆசிரியர்களில் மாணவர்களே மனமுவந்து மெச்சுபவர்களும் உள்ளனர்.
ஆனாலும், மணவர்களிடம் அணுகுவதிலும் அடித்து தண்டிப்பதிலும் சில ஆசிரியர்கள், அந்த தொழிலுக்கு வந்த கறுப்பாடுகள் என்பதை காட்டிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாராலும் மன்னிக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் விளையாடியிருப்பது மாணவர்கள் உயிரோடு.
நாம் எல்லோருமே ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் அடி வாங்கியே வளர்ந்திருப்போம். ஆனால், அந்த கைகளில் நம் பாதுகாப்பு மீதான அக்கறையும் இருந்ததனால், விபரீதங்கள் ஏற்படவில்லை.
ஆனால், தற்போது தினசரி செய்திகளாக, பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததால் உயிர் பலியாவதையும் உறுப்புகள் சேதமடைவதையும் படிக்கிறோம். மாணவி மீது ஒரு ஆசிரியை குச்சியை விட்டு எறிந்ததில் அந்த மாணவியின் கண்பார்வையே பறிபோனது.
சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி நகம் வளர்த்ததுக்காக ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கை வீங்கி மருத்துவ சிகிச்சை செய்யும் அளவுக்கு போனது. அதுக்காக, அந்த ஆசிரியர் போலீசாரால் கடுமையாக எச்சரித்தும் அனுப்பப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கோடம்பாக்கத்தில் இயங்கிவரும் லயோலா என்ற தனியார் பள்ளியில் ரொனால்டு என்ற மாணவனை விசிலடித்த குற்றத்துக்காக உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் அடித்துவிட்டார்.
அதன் விளைவாக, ஆசிரியர் மாணவனின் தந்தை அருளானந்துவால் அடியாட்களை அனுப்பி தாக்கப்பட்டார். இது பெரிய பிரச்சினை ஆனது. இதுக்கு ஆரம்பம் ஆசிரியரின் வன்முறை குணம்தான்.
விழுப்புரத்தில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், படித்த பிரபாகரன் என்ற இரண்டாமாண்டு மாணவனை ஆசிரியர் குணசேகரன் கேள்வி கேட்டிருக்கிறார்.
கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றதால், பிரபாகரனை அடித்து வெளியில் போய் நிற்கச் சொல்லியிருக்கிறார். வெளியில் நின்ற மாணவன் மூக்கில் இரத்தம் வழிந்து மயங்கி விழுந்து இறந்துவிட்டான்.
இதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்திய பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டர். தமிழகம் என்றில்லாமல், இந்தியா முழுவதும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.
மத்திய பிரதேசம், பெடுல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் வாளியை உடைத்த குற்றத்துக்காக, அஸ்லம் அன்சாரி(10) என்ற நான்காம் வகுப்பு படித்த மாணவனை, ஆசிரியர்கள் பிர்ஜூ சொனாரியா, விஜய் ராம் பகத் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அதில் மாணவனின் முதுகெலும்பு உடைந்துபோய் அவன் இறந்தே போனான். உத்தர பிரதேசத்தில் பாரங்கி மாவட்டத்தில் சவுத்ரி துவாரிகா பிரசாத் அகாடெமி என்ற பள்ளி உள்ளது.
அதில் மூன்றாம் வகுப்பு படித்த சிவா ராவத் என்ற மாணவனை பென்சிலும் ரப்பரும் இன்னொரு மாணவனிடம் திருடிவிட்டதாக கூறி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின்போது சிவா ராவத்தின் வயிற்றில் தலைமை ஆசிரியர் லலித் குமார் வர்மா குத்தியதில், மாணவன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவ சிகிச்சை பலனின்றியும் இறந்துவிட்டான். தலைமை ஆசிரியர் கைதானர்.
மேலே சொல்லப்பட்ட சம்பவங்களில் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டது எல்லாம் உப்புசப்பு இல்லாத குற்றங்கள்தான். ஆனால், உயிரே பறிபோய்விட்டது. இதுக்கு காரணம் ஆசிரியர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்தான்.
சில ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும் விதத்தை பற்றி கேள்விப்படும் போது இவர்கள் எப்படி ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுத்து வந்தார்கள் என்றே யோசிக்க வைக்கின்றனர். இதை தடுக்க வேண்டுமென்றால் ஆசிரியர் தேர்வுகளில் மாணவர் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கலாம்.
ஆசிரியர் பணி என்பதில் புனிதம் மட்டுமல்ல பொறுமையும் அடங்கி இருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர் பருவத்தை கடந்து வந்தவர்கள் தான். அதனால், அவர்களுக்கும் மாணவர்களின் மனநிலை அனுபவம் புரிந்திருக்கும்.
ஆதலால், மாணவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு வளைந்து கொடுத்து, மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதுதான் நல்ல ஆசிரிய பணியாக அமையும்.
மாணவனாக இருக்கும்போது தான் செய்வது சரிதான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு பெரியவர்கள் ஆனதும் தனது மாணவ பருவ தவறுகளை உணர்வதோடு, தன்னை அடித்து தண்டித்த ஆசிரியரை கூட தன் முன்னேற்றத்துக்கு காரணமாக கூறி பெருமைப்படுத்துவர்.
அத்தகைய மாணவர் பருவத்தை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் பிரம்புகளை நம்புவதை தவிர்த்து விட்டு அன்பை நம்பட்டும். அடிக்கிற கைதான் அணைக்கும் விலங்கை. (கைது) அந்த பயமும் இருக்கட்டும்.
எல்லா துறைகளிலுமே தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆசிரியர்களில் மாணவர்களே மனமுவந்து மெச்சுபவர்களும் உள்ளனர்.
ஆனாலும், மணவர்களிடம் அணுகுவதிலும் அடித்து தண்டிப்பதிலும் சில ஆசிரியர்கள், அந்த தொழிலுக்கு வந்த கறுப்பாடுகள் என்பதை காட்டிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாராலும் மன்னிக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் விளையாடியிருப்பது மாணவர்கள் உயிரோடு.
நாம் எல்லோருமே ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் அடி வாங்கியே வளர்ந்திருப்போம். ஆனால், அந்த கைகளில் நம் பாதுகாப்பு மீதான அக்கறையும் இருந்ததனால், விபரீதங்கள் ஏற்படவில்லை.
ஆனால், தற்போது தினசரி செய்திகளாக, பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததால் உயிர் பலியாவதையும் உறுப்புகள் சேதமடைவதையும் படிக்கிறோம். மாணவி மீது ஒரு ஆசிரியை குச்சியை விட்டு எறிந்ததில் அந்த மாணவியின் கண்பார்வையே பறிபோனது.
சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி நகம் வளர்த்ததுக்காக ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கை வீங்கி மருத்துவ சிகிச்சை செய்யும் அளவுக்கு போனது. அதுக்காக, அந்த ஆசிரியர் போலீசாரால் கடுமையாக எச்சரித்தும் அனுப்பப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கோடம்பாக்கத்தில் இயங்கிவரும் லயோலா என்ற தனியார் பள்ளியில் ரொனால்டு என்ற மாணவனை விசிலடித்த குற்றத்துக்காக உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் அடித்துவிட்டார்.
அதன் விளைவாக, ஆசிரியர் மாணவனின் தந்தை அருளானந்துவால் அடியாட்களை அனுப்பி தாக்கப்பட்டார். இது பெரிய பிரச்சினை ஆனது. இதுக்கு ஆரம்பம் ஆசிரியரின் வன்முறை குணம்தான்.
விழுப்புரத்தில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், படித்த பிரபாகரன் என்ற இரண்டாமாண்டு மாணவனை ஆசிரியர் குணசேகரன் கேள்வி கேட்டிருக்கிறார்.
கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றதால், பிரபாகரனை அடித்து வெளியில் போய் நிற்கச் சொல்லியிருக்கிறார். வெளியில் நின்ற மாணவன் மூக்கில் இரத்தம் வழிந்து மயங்கி விழுந்து இறந்துவிட்டான்.
இதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்திய பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டர். தமிழகம் என்றில்லாமல், இந்தியா முழுவதும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டுதான் வருகிறது.
மத்திய பிரதேசம், பெடுல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் வாளியை உடைத்த குற்றத்துக்காக, அஸ்லம் அன்சாரி(10) என்ற நான்காம் வகுப்பு படித்த மாணவனை, ஆசிரியர்கள் பிர்ஜூ சொனாரியா, விஜய் ராம் பகத் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அதில் மாணவனின் முதுகெலும்பு உடைந்துபோய் அவன் இறந்தே போனான். உத்தர பிரதேசத்தில் பாரங்கி மாவட்டத்தில் சவுத்ரி துவாரிகா பிரசாத் அகாடெமி என்ற பள்ளி உள்ளது.
அதில் மூன்றாம் வகுப்பு படித்த சிவா ராவத் என்ற மாணவனை பென்சிலும் ரப்பரும் இன்னொரு மாணவனிடம் திருடிவிட்டதாக கூறி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையின்போது சிவா ராவத்தின் வயிற்றில் தலைமை ஆசிரியர் லலித் குமார் வர்மா குத்தியதில், மாணவன் ரத்த வாந்தி எடுத்து மருத்துவ சிகிச்சை பலனின்றியும் இறந்துவிட்டான். தலைமை ஆசிரியர் கைதானர்.
மேலே சொல்லப்பட்ட சம்பவங்களில் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டது எல்லாம் உப்புசப்பு இல்லாத குற்றங்கள்தான். ஆனால், உயிரே பறிபோய்விட்டது. இதுக்கு காரணம் ஆசிரியர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்தான்.
சில ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும் விதத்தை பற்றி கேள்விப்படும் போது இவர்கள் எப்படி ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுத்து வந்தார்கள் என்றே யோசிக்க வைக்கின்றனர். இதை தடுக்க வேண்டுமென்றால் ஆசிரியர் தேர்வுகளில் மாணவர் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கலாம்.
ஆசிரியர் பணி என்பதில் புனிதம் மட்டுமல்ல பொறுமையும் அடங்கி இருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர் பருவத்தை கடந்து வந்தவர்கள் தான். அதனால், அவர்களுக்கும் மாணவர்களின் மனநிலை அனுபவம் புரிந்திருக்கும்.
ஆதலால், மாணவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு வளைந்து கொடுத்து, மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதுதான் நல்ல ஆசிரிய பணியாக அமையும்.
மாணவனாக இருக்கும்போது தான் செய்வது சரிதான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு பெரியவர்கள் ஆனதும் தனது மாணவ பருவ தவறுகளை உணர்வதோடு, தன்னை அடித்து தண்டித்த ஆசிரியரை கூட தன் முன்னேற்றத்துக்கு காரணமாக கூறி பெருமைப்படுத்துவர்.
அத்தகைய மாணவர் பருவத்தை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் பிரம்புகளை நம்புவதை தவிர்த்து விட்டு அன்பை நம்பட்டும். அடிக்கிற கைதான் அணைக்கும் விலங்கை. (கைது) அந்த பயமும் இருக்கட்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum