Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்

Go down

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம் Empty சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணம் விஜயம்

Post by oviya Sat Dec 27, 2014 12:43 pm

யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை மேற்பார்வை செய்வதற்காக சர்வதேச கண்காணிப்பாளர் வருகை தந்துள்ளார்.
நேபாளம் நாட்டினைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவரே நேற்று வருகைதந்து, தேர்தல் கண்காணிப்புப்  பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தபால்மூல  வாக்களிப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இதனை கண்காணிக்கும் வகையிலேயே சர்வதேச கண்காணிப்பாளர் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் வருகை தந்துள்ளார். குறித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார்.

மேலும் வன்முறைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து மேலும் சில சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்னும் சில தினங்களில் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர் என்றும் யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் அமைதியான முறையில் நடைபெற்ற தாபல்மூல வாக்களிப்பு

யாழில் நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பும் எந்தவிதமான வன்முறைகள், முறைகேடுகள் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சியாளருமாக சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தேல்தல் முறைகேடுகள் தொடர்பில் தகவல் தந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்வதற்காக விசேடமாக 5 பொலிஸ் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 300 கண்காணிப்பாளர்கள் எந்த நேரமும் பணியில் அமர்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமது பணிகளை விரைந்து செய்வதற்காக 100 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பாளர்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பிற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. எல்லா தேர்தல்களைப் போன்று இம்முறையும் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதுதவிர தீவகப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட பிரச்சார துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக வேலனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விளப்பரப் பதாகை உடனடியாகவே அங்கிருந்து அகற்றப்பட்டது.

மேலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் முகவர் நிலையங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum