Top posting users this month
No user |
கொடைக்கானல் மாசுப்பிரச்சனை: ராப் பாடல் மூலம் அநியாயத்தை தட்டிக் கேட்கும் பெண்
Page 1 of 1
கொடைக்கானல் மாசுப்பிரச்சனை: ராப் பாடல் மூலம் அநியாயத்தை தட்டிக் கேட்கும் பெண்
கொடைக்கானலை மாசுபடுத்திய யூனிலிவர் கம்பெனியை ராப் பாடல் மூலம் கேள்வி கேட்டுள்ளார் சென்னையை சேர்ந்த சோபியா அஷரப் என்ற பெண்மணி.
நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் சோப்பு, எண்ணெய்களை தயாரித்துவரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி கடந்த 1983 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பாதரச தெர்மா மீற்றர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறிய பாதரச கழிவுகள் மற்றும் பாதரச லெட் வேதியியல் மாற்றங்களாலும் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இந்த தாக்கத்தின் விளைவாக 1,047 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட போராட்டங்களால் இந்த ஆலை மூடப்பட்டது.
ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றப்படாமலேயே உள்ளது.
இதனால் கொடைக்கானலில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மட்டுமின்றி மலையின் சூழலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. நீரும் நிலமும் நஞ்சாகி வருவதால் மக்கள் பெரிய அளவில் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற உள்ளிட்ட விசயங்களை இந்த ராப் பாடலில் சோபியா அஷ்ரப் பாடி அசத்தியுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் சோப்பு, எண்ணெய்களை தயாரித்துவரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி கடந்த 1983 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பாதரச தெர்மா மீற்றர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறிய பாதரச கழிவுகள் மற்றும் பாதரச லெட் வேதியியல் மாற்றங்களாலும் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இந்த தாக்கத்தின் விளைவாக 1,047 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட போராட்டங்களால் இந்த ஆலை மூடப்பட்டது.
ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றப்படாமலேயே உள்ளது.
இதனால் கொடைக்கானலில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மட்டுமின்றி மலையின் சூழலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. நீரும் நிலமும் நஞ்சாகி வருவதால் மக்கள் பெரிய அளவில் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற உள்ளிட்ட விசயங்களை இந்த ராப் பாடலில் சோபியா அஷ்ரப் பாடி அசத்தியுள்ளார்.
தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum