Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கசாப்பை தூக்கிலிட்ட காவலர்தான் மேமனையும் தூக்கிலிட்டார்: தூக்கிலிடும் முன் கடைசி ஆசை நிறைவேற்றம்

Go down

கசாப்பை தூக்கிலிட்ட காவலர்தான் மேமனையும் தூக்கிலிட்டார்: தூக்கிலிடும் முன் கடைசி ஆசை நிறைவேற்றம் Empty கசாப்பை தூக்கிலிட்ட காவலர்தான் மேமனையும் தூக்கிலிட்டார்: தூக்கிலிடும் முன் கடைசி ஆசை நிறைவேற்றம்

Post by oviya Thu Jul 30, 2015 3:01 pm

கசாப்பை தூக்கிலிட்ட அதே காவலர்தான் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

மூன்றாம் இணைப்பு:

1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கசாப்புக்கு கடந்த 2012 நவம்பர் 21ல் தூக்கு தண்டனை நிறைவேற்றிய காவலர்தான் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றினார் என்று தெரியவந்துள்ளது.

புனேவில் உள்ள ஏர்வாடா சிறைச் சாலையில் பணியாற்றி வரும் தலைமைக் காவலருடன் 20 பேர் கொண்ட குழு கடந்த வாரம் நாக்பூர் சிறைக்கு வந்து, யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்த தலைமைக் காவலரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இரண்டாம் இணைப்பு:

தூக்கிலிடப்படுவதற்கு முன்பு யாகூப் மேமனின் கடைசி ஆசையை சிறை அதிகாரிகள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

சிறை அதிகாரிகள் யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு முன்பு, அவரிடம் கடைசி ஆசை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த யாகூப் மேமன், தன் கடைசி ஆசையாக தனது மகளிடம் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறை அதிகாரிகள் மேமன் தனது 21 வயது மகளுடன் போனில் பேச ஏற்பாடு செய்துள்ளனர்.

மகளுடன் பேசிய பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பின்னர் யாகூப் மேமனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாக்பூர் மத்திய சிறையில் கடந்த 31 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யாகூப் மேமன் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் இணைப்பு:

1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் மொத்தம் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மற்றொரு குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரருமான யாகூப் மேமன் உள்பட 189 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை தடா கோர்ட்டில் கடந்த 1995–ம் ஆண்டு தொடங்கியது. 12 ஆண்டுகள் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2007–ம் ஆண்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து தடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து யாகூப் மேனன் பல்வேறு நீதிமன்றங்களை நாடியும், கருணை மனுக்களை அளித்தும் அவை எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், யூலை 30 ஆம் திகதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில், தனது பிறந்தநாளன்று தன்னை தூக்கிலிட வேண்டாம் என ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்தார்.

ஆனால், அந்த மனு தொடர்பான விசாரணை அவசர வழக்காக ஏற்கப்பட்டது, ஆனால், நீதிபதி மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பிரபுல்லா சி பண்ட், அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு யாகூப் கோரிக்கை மனுவை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து யாகூப் மேமனு நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடுவதற்கு முன்னதாக யாகூப் மேமன் உடல்நிலையை சிறைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அவருக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7:00 மணிக்கு முன்னதாக யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளனர்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதையொட்டி நாக்பூர் சிறையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் யாகூப் மேமன் வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

யாகூப் மேமன் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum