Top posting users this month
No user |
கொலை வழக்கில் பிணையில் விடுதலையான நபர் சுட்டுக்கொலை
Page 1 of 1
கொலை வழக்கில் பிணையில் விடுதலையான நபர் சுட்டுக்கொலை
கொலை வழக்கொன்றில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த தங்காலை உக்குவா என்ற நபர் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
உக்குவா உட்பட மூன்று பேரை வாரத்தில் ஒரு நாள் தங்காலை காவற்துறை நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காவற்துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு திரும்பி சென்றுக்கொண்டிருந்த போது தங்காலை நகருக்கு அருகில் உக்குவா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்குவா உட்பட மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மறித்து நிறுத்திய கார் ஒன்றில் இருந்து இறங்கிய சிலர் முச்சக்கர வண்டியில் பின் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உக்குவா என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கொலை வழக்கொன்றில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
உக்குவா உட்பட மூன்று பேரை வாரத்தில் ஒரு நாள் தங்காலை காவற்துறை நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காவற்துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு திரும்பி சென்றுக்கொண்டிருந்த போது தங்காலை நகருக்கு அருகில் உக்குவா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்குவா உட்பட மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மறித்து நிறுத்திய கார் ஒன்றில் இருந்து இறங்கிய சிலர் முச்சக்கர வண்டியில் பின் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உக்குவா என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கொலை வழக்கொன்றில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum