Top posting users this month
No user |
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்: ஜெயலலிதாவை எச்சரிக்கும் விஜயகாந்த்!
Page 1 of 1
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்: ஜெயலலிதாவை எச்சரிக்கும் விஜயகாந்த்!
மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றி செயல்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் ஒருமித்தகுரல் கொடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காக அதிமுக அரசு இருக்கிறது.
மதுக்கடைகளை மூடக்கோரினால் ஏட்டிக்குப் போட்டியாக, சகல வசதிகளுடன் கூடிய எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதும், மது விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் அதிகாரிகளை கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்துவதும் என்ன நியாயம்?
சுமார் ஆயிரத்து முந்நூறு அரசுபள்ளிகளை மூடுவதாக செய்திகள் வருகின்றன.
அதிமுக அரசு அதை தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல், மதுவினால் சீரழிந்துகொண்டுள்ள தமிழகத்தை, மேலும் சீரழிக்க முயற்சிக்கலாமா?
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுவியாபாரத்தை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, இந்த அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்னையில் காட்டியிருக்கலாம் அல்லவா?
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொரு பிரச்னையிலும் மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் ஒருமித்தகுரல் கொடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காக அதிமுக அரசு இருக்கிறது.
மதுக்கடைகளை மூடக்கோரினால் ஏட்டிக்குப் போட்டியாக, சகல வசதிகளுடன் கூடிய எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதும், மது விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் அதிகாரிகளை கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்துவதும் என்ன நியாயம்?
சுமார் ஆயிரத்து முந்நூறு அரசுபள்ளிகளை மூடுவதாக செய்திகள் வருகின்றன.
அதிமுக அரசு அதை தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல், மதுவினால் சீரழிந்துகொண்டுள்ள தமிழகத்தை, மேலும் சீரழிக்க முயற்சிக்கலாமா?
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுவியாபாரத்தை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, இந்த அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்னையில் காட்டியிருக்கலாம் அல்லவா?
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொரு பிரச்னையிலும் மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum